Thursday 31 May 2012

மீளப் பெறப்பட்ட முத்திரை................!

வரலாற்றை நினைவுபடுத்தியதால் மீளப் பெறப்பட்ட முத்திரை 1956இல் 'விச(ஜ)யனின் வருகை' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை(முத்திரை) ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது.


குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விசயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இத் தபால் தலை அமைந்திருந்தது.

தபால் தலையைப் பார்த்த பெரும்பான்மையினத் தலைவர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். "விசயன் இந்தியாவில் இருந்து இ...லங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல.

தவிரவும், விசயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப் பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகி விடும்.

எனவே, இந்தத் தபால் தலையை மீளப் பெற வேண்டும்" என்று கூறினார்கள். இதன் காரணமாக, இந்தத் தபால் தலையை இலங்கை அரசு மீளப் (வாபஸ்) பெற்றுக்கொண்டது. ஆனால், அதற்குள் இத் தபால் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Wednesday 30 May 2012

"சிங்கள மொழி" மட்டுமே இலங்கையின்.....!

சிங்களம் மட்டும் சட்டம் (Sinhala Only Act) அல்லது அதிகாரபூர்வமாக 1956 ம் ஆண்டின் 33ம் இலக்க அரசகரும மொழிகள் சட்டம் (Official Language Act) என்பது எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு சூன் 5 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி" என்ற சட்டத்தைக் குறிக்கும்.

இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சிமொழியான ஆங்கில மொழி அகற்றப்பட்டு 70% பெரும்பான்மை சிங்களவர்கள் பேசும் சிங்கள மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது. பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தது. அரசுப் பதவிகளுக்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது.

1936 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரிகளான என். எம். பெரேரா, பிலிப் குணவர்தனா போன்றவர்கள் ஆங்கிலத்திற்குப் பதிலாக சிங்களம், மற்றும் தமிழ் ஆகியவற்றை ஆட்சிமொழிகளாக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

நவம்பர் 1936 இல், 'இலங்கைத் தீவு முழுவதும் உள்ளாட்சிகள் மற்றும் காவல்துறை நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளிலேயே வழக்குகள் நடத்தப்பட வேண்டும்' மற்றும் 'காவல் நிலையங்களில் சாட்சிகளின் மொழிகளிலேயே வழக்குகள் பதியப்பட வேண்டும்' போன்ற சட்டமூலங்கள் அரசாங்க சபையில் கொண்டுவரப்பட்டு சட்டச் செயலாளருக்கு மேலதிக ஆணைக்காக அனுப்பப்பட்டடன.

1944 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெயவர்தனா ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களத்தை அதிகாரப் பூர்வமொழியாக்க வேண்டும் என அரசாங்க சபையில் கோரினார். ஆனாலும் ஆங்கிலம் தொடர்ந்து 1956 வரை ஆட்சி மொழியாக இருந்து வந்தது.

1948 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்று டொமினியன் தகுதி (அந்தஸ்து) பெற்றது. 1951 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி இலங்கை சுதந்திரக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சியின் மகாசன எக்சத் பெரமுன கூட்டணி 1956 தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது.

பண்டாரநாயக்காவின் அமைச்சரவை பதவியேற்று 53 நாட்களுக்குள் (1956, சூன் 5) சிங்களம் மட்டும் சட்டம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டமூலத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்தது.

தமிழ்க் கட்சிகள், மற்றும் சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்டுகள் எதிர்த்து வாக்களித்தனர்.

இம்மசோதா 1956 சூலை 6 இல் செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட போது 19 பேர் ஆதரவாகவும், 6 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர்.

இச்சட்டமூலத்தின் காரணமாக அரசுப்பணியில் உள்ள தமிழர்களும் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

இச்சட்டத்தினை தமிழ், மற்றும் சிங்கள இடதுசாரி உறுப்பினர்கள் எதிர்த்தனர். எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் பல போராட்டங்கள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற தமிழர் பகுதிகளில் அரசின் செயற்பாடுகள் இயங்க விடாது செய்யப்பட்டன. திருத்தச் சட்டமூலம் தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து பண்டாரநாயக்கா அரசு 1958 செப்டெம்பர் 3 ஆம் நாள் 1958(28) என்ற திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

இதன்படி 'நியாயமான தமிழ் மொழிப் பயன்பாட்டை' அங்கீகரித்தது. பின்வரும் சலுகைகளை வதிந்துரைத்தது:

தமிழ்ப் பாடசாலைகளில் போதனாமொழியாகத் தமிழ், தமிழர்கள் அரச சேவையில் சேர்வதற்கான போட்டிச் சோதனைகள் தமிழில் நடத்தப்படல், அரச நிறுவன தொடர்பு மொழி தமிழ், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச நடவடிக்கைகள் தமிழில் இடம்பெறல் ஆகியனவாகும் தமிழர் வாழ் பகுதிகளில் தமிழும் பயன்படுத்தப்படலாம் எனும் திருத்தம் ஏற்படுத்தப்பட்டது.

சுதந்திர இலங்கையில் இனங்களுக்கிடேயே பகையை உருவாக்கிய முதலாவது சட்டமாக, இச்சட்டம் பலராலும் கருதப்படுகிறது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

393 ஆண்டாக தமிழர் அழிப்பு தொடர்கிறது...!


இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் எப்படி சூழ்ச்சிகள் செய்து நாட்டைப் பிடித்தார்களோ, அதேபோல் இலங்கைக்கு வியாபாரம் செய்யப்போன ஐரோப்பியர்கள் தந்திரமாக நாட்டைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இலங்கைக்கு முதன் முதலாக வந்த ஐரோப்பியர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.

ஏறக்குறைய இந்தியாவுக்குள் போர்ச்சுக்கீசியர்கள் அடியெடுத்து வைத்த காலக்கட்டத்தில்தான் அவர்கள் இலங்கையையும் கைப்பற்றினர். கி.பி. 1505-ம் ஆண்டின் இறுதியில் போர்ச்சுக்கீசியர்கள் வந்த கப்பல் ஒன்று, புயலில் சிக்கியது. புயலில் திசை மாறி அந்த கப்பல் இலங்கையின் கடலோரப் பகுதியில் ஒதுங்கியது. அந்த கப்பலின் கேப்டன் பெயர் டாம் லூரங்கோ.

உள்நாட்டு குழப்பம்

அப்போது இலங்கையில் கோட்டை, சித்தவாகா, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய 4 ராச்சியங்கள் இருந்தன. இந்த 4 ராச்சியங்களின் ஆட்சியாளர்களிடம் ஒற்றுமை இல்லை. உள்நாட்டுக் குழப்பங்கள் நிலவின.முதலில் வியாபாரம் செய்வதே போர்ச்சுக்கீசியர்களின் நோக்கமாக இருந்தது.

பின்னர், இலங்கையின் சூழ்நிலையைப் பார்த்த அவர்கள், "ஆட்சியைப் பிடிக்க இதுவே தக்க தருணம்'' என்று தீர்மானித்தனர். அவர்களிடம் நவீன போர்க் கருவிகள் இருந்தன. அவற்றைப் பயன்படுத்தி, இலங்கையின் மேற்கு கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பகுதிகளிலும் ஊடுருவினர்.

தமிழ் மன்னன்

போர்ச்சுக்கீசியர்கள் இலங்கையில் கோட்டை ராச்சியத்தைக் கைப்பற்றிக் கொண்டபோது, யாழ்ப்பாண ராச்சியத்தை செகராசசேகரன் என்கிற முதலாவது சங்கிலி (1519-1561) என்ற தமிழ் மன்னன் ஆண்டு வந்தான். யாழ்ப்பாண அரசை கைப்பற்ற போர்ச்சுக்கீசியர்கள் பலமுறை முயன்றும் தோற்றுப்போனார்கள்.

முடிவில், "மன்னாரில் வியாபாரம் மட்டும் செய்து கொள்கிறோம்'' என்று சங்கிலி மன்னனிடம் அனுமதி பெற்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வியாபாரம் செய்து வந்த போர்ச்சுக்கீசியர்கள், தமிழரிடையே இருந்த சாதிப்பாகுபாட்டை பயன்படுத்திக் கொண்டு, ஒரு பகுதியினரை தங்களோடு சேர்த் துக்கொண்டு, சங்கிலிக்கு எதிராகக் கலகம் செய்தனர்.

சங்கிலி அங்கு தன் படையோடு சென்று கலகத்தை அடக்கினான். கலகத்துக்கு காரணமாக இருந்தவர்களின் தலையைத் துண்டித்தான். இதனால் ஆத்திரம் அடைந்த போர்ச்சுக்கீசியர்கள், யாழ்ப்பாண அரசை கைப்பற்ற தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

முதலாம் சங்கிலிக்குப் பிறகு இரண்டாம் சங்கிலி (1615-1619) ஆட்சிக்கு வந்தான். அப்போது, போர்ச்சுக்கீசியர்கள் உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டனர். இதற்கு, பிதுறு பொட்டன்கோன் என்ற போர்ச்சுக்கீசிய பாதிரியார் தலைமை தாங்கினார்.

கடும் போர்

உள்நாட்டுக் கலவரத்தை ஒடுக்க இரண்டாவது சங்கிலி மன்னன் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டான். தனக்கு உதவி செய்யுமாறு, தமிழ்நாட்டில் இருந்த ரகுநாத நாயக்க மன்னனுக்கு செய்தி அனுப்பினான். நாயக்க மன்னனும் வர்ணகுலத்தான் என்ற தளபதி தலைமையில் 5,000 வீரர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தான்.

அதே சமயம், மன்னன் சங்கிலியை முறியடிக்க போர்ச்சுக்கீசியர்கள் படை திரட்டினர். கோட்டையில் இருந்து மன்னாரை நோக்கி நூறு போர்ச்சுக்கீசிய வீரர்களும், சில நூறு சிங்களக் கூலிப்படையினரும் அனுப்பப்பட்டனர்.

அதே நேரத்தில் தரை வழியாகவும் 130 போர்ச்சுக்கீசிய ராணுவ வீரர்களும், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிங்களக் கூலிப்படையினரும் யாழ்ப்பாணத்தை நோக்கி விரைந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் போர் நடந்தது. சிங்கள கூலிப்படையின் உதவியுடன் யாழ்ப்பாண மன்னன் சங்கிலியை போர்ச்சுக்கீசியர் தோற்கடித்து கைது செய்தனர்.

தூக்கு தண்டனை

இந்தக் காலக்கட்டத்தில், இந்தியாவில் உள்ள கோவா நகரம் போர்ச்சுக்கீசியர் வசம் இருந்தது. அங்கு சங்கிலியை கொண்டு சென்றனர். சங்கிலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவன் தூக்கில் போடப்பட்டான்.ஈழமன்னன் முதன் முறையாக அந்நியர்களான போர்ச்சுக்கீசியர்களிடம் தோற்றதுடன், மரணத்தையும் தழுவ நேர்ந்தது. அதற்கு போர்ச்சுக்கீசியர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் சிங்களர்கள்.

இலங்கையின் மத்தியப் பகுதி, கிழக்கு கடற்கரைப் பகுதி ஆகியவை தவிர இலங்கையின் மற்ற பகுதிகள் போர்ச்சுக்கீசியர்கள் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளுக்கு போர்ச்சுக்கீசியர்களும், தாழ்ந்த பதவிகளுக்கு தமிழரும், சிங்களர்களும் அமர்த்தப்பட்டனர்.

சிங்களர்களையும், தமிழர்களையும் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தவர்களும், `கீழ்ச்சாதி' என்று கருதப்பட்டவர்களும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினர்.

போர்ச்சுக்கீசியர்கள், இலங்கையின் முன்னேற்றத்துக்காக எதுவும் செய்யவில்லை. மிளகு, லவங்கப்பட்டை, பாக்கு போன்றவற்றையும், யானைகளையும் தங்கள் நாட்டுக்கு கொண்டு போயினர்."போர்ச்சுக்கீசியர்கள் ஆட்சி காலத்தை இலங்கையின் இருண்ட காலம்'' என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

பிற்குறிப்பு :

393ஆண்டுகளாக வேற்று நாட்டவரின் உதவியுடன் தமிழ் மக்க்களின் பூர்வீகத் தாயகத்தையும், தமிழ் மக்களையும், தமிழ் மக்களை உணர்வுடனும் விழிப்புடனும் வழிநடத்தும் தலைமைகளையும் அழிப்பதில் மிகத்தந்திரமாக தனது காய்களை நகர்த்துவதில் சிங்கள இனம் மிகநீண்ட வரலாறைக் கொண்டுள்ளதைத் தமிழர்களாகிய நாம் கருத்திற் கொண்டு எமது கடமைகளை தொடர வேண்டுகின்றேன்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Tuesday 29 May 2012

தலைவர் பிரபாகரன் தொடர் ............6


சரியான இருட்டுக் காடு. யாரும் அத்தனை சுலபத்தில் பொடிநடையாக உள்ளே வந்துவிட முடியாத அளவுக்கு அடர்த்தியும் அபாயங்களும் நிறைந்த காடு. அபாயத்தில் பெரிய அபாயம், கால் வைக்கும் இடங்கள். அடடே காய்ந்து கிடக்கிறதே என்று அடியெடுத்து வைத்தால் அப்படியே உள்ளே போய்விட வேண்டியதுதான். புரையோடிய சதுப்பு நிலம். மேலே தரை போலவும், கீழே பல அடி ஆழத்துக்குச் சேறுமாகப் பல இடங்களில் இருக்கும்.

சுற்றிலும் கனத்த மரங்கள். முட்புதர்கள். என்னவென்று பெயர் தெரியாத காட்டுச் செடிகள். பகலில் கூடப் பல இடங்களில் இருட்டாகவே இருக்குமளவுக்கு அப்படியொரு அடர்த்தி. சிரமப்பட்டு அந்தப் பிரதேசத்தைக் கடந்துவிட்டால் சுமார் ஐம்பது ஏக்கர் பரப்பளவில் நல்ல தரை உண்டு.

அருமையான விவசாய நிலம். பயிர் செய்யலாம். குடிசை போட்டு சுகமாக வாழலாம். மனித வாசனையே கிடையாது. யானை வாசனை மட்டும்தான். `பிரமாதம், இங்கேயே நாம் கூடாரம் அமைக்கலாம்’ என்று பிரபாகரன் சொன்னார்.

அது புகழ்பெற்ற வவுனியா கானகத்தின் ஒரு பகுதி. எந்தப் பக்கத்துபிரதான வீதியிலிருந்து வந்தாலும் ஏழு கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தாக வேண்டும். யோகம் (அதிர்ஷ்டம்) இருந்தால் உயிருடன் அந்த ஐம்பது ஏக்கர் நிலப்பகுதிக்கு வந்து சேர்ந்துவிடலாம். `பூந்தோட்டம்’ என்று பெயர். பிரபாகரன் தான் வைத்தார். தோழர்கள் பரபரவென்று நிலத்தைச் சீராக்கி விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள்.

தக்காளி விதைக்கலாமா? வெண்டைக்காய்? கத்திரி கூட நன்றாக விளையும். ஆளுக்கொன்று ஆசைப்பட்டார்கள். கொஞ்சம் அரிசி கூட முயற்சி செய்து பார்க்கலாமே? சத்தியமாகத் தங்களைத் தேடிக்கொண்டு காவல் துறையினர் வந்துவிட முடியாத இடம் என்பது உறுதியான சந்தோசத்தில் அவர்கள் உற்சாகமாக விவசாயம் செய்தார்கள்.

உத்வேகத்துடன் துப்பாக்கி சுடப்பழகினார்கள். மணிக்கணக்கில் ஓடவும் எகிறிக் குதிக்கவும் சரேலென்று பதுங்கவும் பாயவும் ஓடியபடி சுடவும் சுட்டுவிட்டுத் தப்பிக்கவும் அக்கறையுடன் பயிற்சியெடுத்தார்கள். யானைகள் நிறைந்த அந்தக் கானகத்தின் நடுவே சுமார் இருபது புலிகள் பிறந்து வளர்கின்றன என்று சொன்னால்கூட அப்போது யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.

யாழ்ப்பாணம் முழுதும் இளைஞர்கள் பல்வேறு குழுக்களாகவும் உதிரிகளாகவும் ஆயுதப் புரட்சி குறித்து கனவு கண்டுகொண்டிருந்த சமயத்தில் முறையான பயிற்சி, அதன்பிறகு செயல் என்று தீர்மானமாகக் களமிறங்கிய முதல் நபர் பிரபாகரன்.

`நண்பர்களே, ஒரு விசயம். ஓர் இயக்கம் ஒழுங்காக வளர்வதும் வாழ்வதும் சாதிப்பதும் அத்தனை எளிதான செயலல்ல. நம்மிடையே மிகச் சிறந்த கட்டுப்பாடுகள் இருந்தாலொழிய நமது போராட்டம் வெல்லாது. உங்களில் எத்தனை பேர் வீடு, குடும்பம், காதல், திருமணம் போன்ற சிந்தனைகளை முற்றுமுழுதாகத் துறக்கத் தயாராக இருக்கிறீர்கள்?’ பிரபாகரன் கேட்டார்.

அத்தனை பேரும் கைதூக்கினார்கள். `சரி. நம்மில் யாரும் புகை பிடிக்கக்கூடாது. மது அருந்தக்கூடாது. எந்த விதமான போதைப் பொருட் களுக்கும் இயக்கத்தில் இடமில்லை. இது கட்டாயம். யாராவது விதி மீறினால் உடனே வெளியேற்றப்படுவீர்கள். முற்று முழுதான விழிப்புணர்வுடன் அத்தனை பேரும் இருந்தாகவேண்டும். சம்மதமா?’ `சரி’ என்றார்கள்.

`இயக்கத்தில் யாரும் வீட்டுக்குப் போகக்கூடாது. வீட்டாருடன் ரகசியமாகக் கூடத் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது. அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா எல்லோரும் முக்கியம்தான். லட்சியம் அனைத்தைக் காட்டிலும் முக்கியம்.

நாம் அவர்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களுக்கும் அது பிரச்னையாகிப் போகும். புரிகிறதா?’ முன்பொரு நாள் அதிகாலை ஐந்து மணி சுமாருக்கு வல்வெட்டித்துறையில் பிரபாகரன் வீட்டுக்கு காவல் துறையினர் வந்து கதவு தட்டியதே? அப்போது எழுந்து வெளியே போனதுடன் சரி. இன்றுவரை அவர் தன் வீட்டுப்பக்கம் சென்று பார்த்ததில்லை.

அந்த மன உறுதியைத்தான் அவர் தமது தோழர்களிடம் அன்றைக்கு வாக்குறுதியாகக் கேட்டார். `எந்தக் காரணத்தாலாவது இயக்கத்திலிருந்து யாராவது வெளியேற நேர்ந்தால் அவர்கள் வேறொரு இயக்கத்தில் போய்ச் சேரவோ, புதிய இயக்கம் தொடங்கவோ கூடாது.

புலிகள் அமைப்புக்குள் நிகழும் எந்த ஒரு விசயமும் வெளியே குறிப்பாக எதிரிகளுக்குத் தெரியக்கூடாது. நாம் நட்புணர்வுடன் இருப்போம். ஆனால் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக முக்கியம். எந்த விதியையும் யாரும் மீறுவதற்கில்லை.

மீறுவது என்று யார் முடிவு செய்தாலும் அது இயக்கத்துக்கு துரோகம் செய்வதாகும். சம்மதமா?

’ அவர் கவலைப்பட்டதில் நியாயம் இல்லாமல் இல்லை. யாழ்ப்பாணத்தில் அன்றைக்கு இம்மாதிரி புரட்சிகரக் கனவுடன் களமிறங்கிய பல இளைஞர் குழுக்கள் வெகு சீக்கிரத்தில் காணாமல் போய்க்கொண்டிருந்தன.

மாணவர் பேரவை இருந்தது, சிதைந்து விட்டது. பிறகு இளைஞர் பேரவை வந்தது. அதுவும் சிதறிவிட்டது. டி.எல்.ஓ. என்று ஒரு குழு தொடங்கப்பட்டது. ஒரே ஒரு வங்கிக்கொள்ளையுடன் காணாமல் போய்விட்டது. பெயர் வெளியே தெரியும் முன்பே இயக்கம் சிதைந்த கதைகள் அநேகம்.

அம்மாதிரியான அனர்த்தங்கள் ஏதும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் அறவே கூடாது என்று அவர் நினைத்தார். அதனால்தான் யாரும் எண்ணிப் பார்க்கமுடியாத கடும் நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட்டன.

இயக்கத்தின் உறுப்பினர்களுக்குப் பிரபாகரன் அளித்த போர்ப்பயிற்சிகளுக்குக் கூட முன்மாதிரிகள் கிடையாது. கெரில்லாப் போர் முறைதான். திடீரென்று தோன்றித் தாக்கிவிட்டுக் காணாமல் போய்விடும் முறை. உலகின் பல பாகங்களில் பல இயக்கங்கள் கடைப்பிடிக்கும் வழக்கம்தான்.

ஆனாலும் யார் எப்படிச் செய்கிறார்கள், எப்படித் தாக்குகிறார்கள், எப்படித் தப்புகிறார்கள் என்றெல்லாம் பிரபாகரன் ஆராயவில்லை. விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவும் இல்லை.

இதோ பாருங்கள். இது நம்மண். நமது பிரச்னை. நமது எதிரிக்கு எது சரி என்று நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இன்னொரு இடத்தில் கையாளப்படும் போர்க்கலை உத்திகள் இங்கே எடுபடும் என்று சொல்வதற்கில்லை.

தெற்கே ஜனதா விமுக்தி பெரமுனா ஒரு புரட்சி செய்தார்களே, என்ன ஆயிற்று பார்த்தீர்கள் அல்லவா? அதுவும் ஆயுதப் புரட்சிதான்.

அரசுக்கு எதிரான புரட்சிதான். சீனப் புரட்சி, ரஷ்யப் புரட்சி முன் மாதிரிகளை வைத்துக்கொண்டு வியூகம் வகுத்தார்கள். என்ன ஆனது?

பதினைந்தாயிரம் பேரை பலி கொண்டது தவிர வேறென்ன லாபம்?

வேண்டாம். யாரையும் பார்க்காதீர்கள். நமக்கு முன்மாதிரிகளைத் தேடிக்கொண்டிருக்க வேண்டாம். நமக்கு நாம்தான் ஆசிரியர்கள். நமது பாதையை நாம் தீர்மானிப்போம்.

இந்தக் காட்டுக்குள் இப்படியொரு வசதியான பயிற்சியிடத்தை நமக்கு நாமே கண்டெடுக்கவில்லை? அதே மாதிரி, நமக்கேற்ற போர்ப்பயிற்சிகளை நாமே உருவாக்கிக்கொள்வோம்.

அப்படித்தான் அவர் ஆரம்பித்தார். தமிழர்களை புழு பூச்சி அளவுக்குக் கூட மதிக்காத இலங்கை அரசின் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் 1978 செப்டம்பர் 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெயவர்த்தனே அரசுக்கு எந்த வகையில் சவால் விடுக்கலாம் என்று அரசியல் கட்சியினர், போராளி இளைஞர்கள் எல்லோரும் ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

பிரபாகரன் அதற்குள் காரியத்தைச் செய்தே முடித்துவிட்டார். ஏர் லங்காவுக்குச் சொந்தமான ஒரு ஆவ்ரோ விமானம். பயணிகள் இறங்கும் வரை பொறுத்திருந்துவிட்டு வெடிக்கும் விதத்தில் ஏற்பாடு செய்து தேசத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தார்.

இது பேசும் இயக்கமல்ல; செய்யும் இயக்கம் என்று அத்தனை பேருக்கும் புரிந்தது அப்போதுதான். எல்லாம் சரியாக இருந்தது. எல்லோரும் சரியாகவே இருந்தார்கள். சற்றும் எதிர்பாராத விதத்தில்தான் அந்தப் பிரச்னை வந்தது. பிரச்னை என்பது பூதாகரமாகத்தான் வரவேண்டுமா என்ன? ஒரு காதலாக அது வந்தது.

(தொடரும்)

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.


Monday 28 May 2012

தொன்முதுமக்களுக்கும் நமது...................!


ஆஸ்திரேலிய தொன்முதுமக்கள் நம் உறவினரகள் பெருமளவான ஆஸ்திரேலிய தொன்முதுமக்களுக்கும் நமது ஆதித்தமிழர்களுக்கும் ஒரா டி. என. எ உள்ளது.

அதாவது எம்‍ ௱௩௰(130), என்று சமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னார் கண்டறியப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. டி.என.எ எம்‍ ௱௩௰ ரகமுடைய திரு விருமாண்டி ஆதித்தேவர் இவர் தான்.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

Saturday 26 May 2012

மொழிகளில் மிகப் பழமை......................!


தொல்காப்பியம் அருண்மொழித்தேவர் (தொல்காப்பியர்) பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம். தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும்.

தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.

மூன்று தமிழ் : தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.

1. பழந்தமிழ் 2.
2.இடைக்காலத்தமிழ் 3.
3.தற்காலத்தமிழ்

1. பழந்தமிழ் (Ancient Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ்
 Early ancient Tamil (or) Proto Ancient Tamil

ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval Ancient Tamil

இ. பின்பழந்தமிழ் – Later Ancient Tamil

2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன்இடைக்காலத் தமிழ் – Early Medieval Tamil

ஆ. மத்தியஇடைக்காலத் தமிழ் – Medium Mediaval Tamil

இ. பின்இடைக்காலத் தமிழ் – Later Medieval Tamil

3. தற்காலத் தமிழ் (Modern Tamil)

உட்பிரிவுகள் மூன்று.

அ. முன் தற்காலத் தமிழ் – Early Modern Tamil

ஆ. பின் தற்காலத் தமிழ் – Later Modern Tamil

முன்பழந்தமிழ் அல்லது தொல்பழந்தமிழ்
Early ancient Tamil (or) Proto Ancient Tamil

திராவிட மொழிகள் பல உள்ளன. அவைகள் அனைத்தும் தமிழ் என்ற ஒரு மூல மொழியிலிருந்து உருவானவைகள். தொல்பழங்காலத்தில் திராவிட மூல மொழியாக இருந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள். அவற்றை நாம் ” திராவிட மொழிக் குடும்பம்” என்று அழைக்கிறோம். பல மொழிகள் உருவாக மூலமாக, கருவாக இருந்த மொழியினைத் தொல்திராவிட மொழி அல்லது மூலத்திராவிட மொழி (Proto Diravidan Language) என்கிறோம்.

திராவிட மொழிக் குடும்பம்

மூலத்திராவிட மொழி அல்லது தொல் திராவிட மொழியாகத் திகழ்ந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பம் என்கிறோம். தமிழ், கோண்டி, கூயி, கூவி, கோவாமி, மண்டா, கொண்டா, நாயக்கி, குருக், மால்தோ, பிராகூய் போன்றவைகளோடு இன்னும் பல பல உண்டு. திராவிட மொழிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

1. தென் திராவிட மொழிகள் – தமிழ், மலையாளம், கன்னடம்.
2. நடுத்திராவிட மொழிகள் – தெலுங்கு, கோண்டி, கூயி, கூவி மேலும் பல உள்ளன.
3. வடதிராவிட மொழிகள் – குருக், மால்தோ, பிராகூப் மேலும் பல உள்ளன.

தமிழ்மொழியின் பெரும்புகழ்

திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ். சுமார் ஐந்தாயிரம் (5000) ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல இலக்கியங்களையும் பெற்று பாரெங்கும் புகழ்பரவ, பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ஒரே மொழி தமிழாகும். திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும் இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி” (Diravidan Etymological Dictonary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள்.

இத்தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தூவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.


நன்றிகள் பல.

பழந்தமிழர் கண்ட இன்றைய..............!


பழந்தமிழர் கண்ட இன்றைய உண்மை...

பெரும்பாலான உலக மக்கள் தாலமியின் தவறான அறிவியல் கண்டுபிடிப்பை(???) நம்பி கொண்டிருந்த பொழுது அதே தாலமியின் காலகட்டத்திற்கு முன்பே தமிழரின் சரியான, புரட்சியான விஞ்ஞான கண்டுபிடிப்பை ஒருவரும் அறியவில்லையே..??

தாலமி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு [கி.மு 1(க)-ம் நூற்றாண்டில் வாழ்ந்த எகிப்து வானவியலாளர் ஆவார்.

இவர் பூமியை சுற்றியே சூரியன், கோள்கள், ஏன் விண்மீன்கள் கூட சுற்றிவருகின்றன தன் கண்டுபிடிப்பாக அறிவித்தார்.

இந்த அறிவியல்(!!!) கண்டுபிடிப்பானது கோபர் நிக்கஸ், கலீலியோ வரும் வரை அதாவது கிட்டதட்ட கி.பி 1500 வருடங்கள் கோலோச்சியது.

ஆனால் கி.மு 3ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 2ஆம் நூற்றாண்டுக்குமிடையில் பாடப்பட்டவையான சங்க இலக்கியங்களில் ஒன்று பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கடியலூர் உருத்திரங்கண்ணனார்” என்ற புலவரால் பாடப்பட்டது. இதில் வரும் 67 – 72 வரையான வரிகள் தான் மேற்கூறிய நம் ஊகத்துக்கு சான்றளிக்கின்றன:  

“நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு நாண்மீன் விராய கோண்மீன் போல, மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக், கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப், பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ, திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்”

இதன் பொருள் இதுதான்…

“சூரியனை சுற்றி வரும் கோள்களைப் போல இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான்” இலக்கியத்தைப் பொறுத்தவரை, உவமைக்கு பயன்படும் பொருள் ஏற்கனவே மக்களால் அறியப்பட்டதாகத் தான் இருக்கும்.

உதாரணமாக,

“மதி போன்ற முகம்” என்ற உவமையைக் கவனித்தவுடன் நாம் முதலில் சந்திரனையே எண்ணுகிறோம்; பின்பு அதை குறிப்பிட்ட முகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.

எப்போதும் உவமை என்பது, ஏற்கனவே அறிந்த ஒன்றுடன், தெரியாததை ஒப்பிட வைத்து குறிப்பிட்ட விடயத்தை எமக்கு இலகுவாகப் புரியவைக்கிறது.

இங்கோ, எதிரிகள் சூழ்ந்த மாவீரன் என்பதே, கோள்கள் சூழ்ந்த சூரியன் என்று தான் உவமிக்கப்படுகின்றது என்பது அக்காலத் தமிழர், ஞாயிறையே ஏனைய கோள்கள் சுற்றிவருகின்றன என்ற உண்மையை அறிந்திருந்தார்கள் என்பதற்கு சான்றாக இல்லையா???

எவ்வளவு பெரிய அறிவியல் உண்மையை, இந்தப் பழந்தமிழ் இலக்கியம், சர்வசாதாரணமாக, அதேவேளை மிகுந்த அடக்கத்துடன் சொல்கிறது..???

தமிழ் அறிவோம்

Friday 25 May 2012

"மறவோம்" "நினைவில் வைத்திருப்போம்" !

"மறவோம்" "நினைவில் வைத்திருப்போம்" இந்த இரு வார்த்தைகள் தான் யூதர்களின் பொன்மொழியாக உள்ளது.

யூதர்கள் 5000 ஆண்டுகள் அடிமைப்பட்டு சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆட்பட்டார்கள்.தங்கள் இனம் அழிக்கப்பட்ட வரலாறை அவர்கள் மறக்காமல் நினைவு கூர்ந்தே வந்தனர்.

தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்த்மஸ் போன்று யூதர்களுக்கு ஒரு பெருவிழா உண்டு.அந்த நாளில் அவர்கள் வேப்பங்காயை விட பல மடங்கு கசக்கும் ரசத்தை சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் அருந்துவார்கள்.

அப்போது மத குரு ஒருவர் தன் இனம் பட்ட துயர வரலாற்றை,கடந்து வந்த பாதையை கூறுவார்.நம் இனம் பட்ட துயரத்தை மறக்காமல் என்றும் நினைவில் வைத்திருந்ததால் தான் அவர்களால் போராடி "இஸ்ரேல்" என்ற நாட்டை 1948 -ல் அடைய முடிந்தது.


தமிழீழ மக்களும் தம் துயரங்களை ஒரு போதும் மறக்காமல்,தொடர்ந்து போராடி தமிழீழத்தை வெல்வோம் என்று இந்நாளில் சூளுரைப்போம்....!
வீரம் விளைந்த ஈழத்தில்....!


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

Thursday 24 May 2012

2012 மே பதினெட்டில்..................!

2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன?
































தமிழர்கள் உலகம் முழுவதும் ஒன்றுதிரண்டு இலங்கையரசு தம் மீது திணித்த பேரவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவை கடைப்பிடித்து (அனுஸ்டித்துக்) கொண்டிருந்த நாளில், இலங்கை இராணுவம் இரகசியமான முறையில் முள்ளிவாய்க்காலுக்கு முல்லைத்தீவிலிருந்து உள்நுழையும் பிரதான கடவையான வட்டுவாகலில் மிகப் பிரமாண்டமான பௌத்த விகாரையைத் திறந்துள்ளது.

இறுதிப் போரில் அதிகளவான தமிழ் உயிர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்ட காணியொன்றில் இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

அயலில் இருக்கின்ற காணிகளையும் பெரியளவில் உள்வாங்கி அந்த விகாரைக்கான நிலப்பகுதி விஸ்தரிக்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகின்றது.

இரண்டடு வாரத்துக்கு முன்னர் சீன நிறுவனமொன்று கொக்கிளாயிலிருந்து முள்ளிவாய்க்கால் வரைக்குமான கடற்கரை வீதியை நல்ல முறையில் செப்பனிட்டு வழங்கியிருந்தது.

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் இல்லாத நிலையில் அந்தப் பாதை தெற்கிலிருந்து போரின் தடயங்களைப் பார்க்க வரும் சிங்கள சுற்றுலாபயணிகளுக்கே பயன்படுகின்றது.

அத்தோடு அந்தப்பாதை புலிமோட்டையிலிருந்து கொக்கிளாய் வரையான சிங்கள குடியேறிகளின் பயணத்துக்கு ஏற்பவே அஅமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியின் அருகாக அமைக்கப்பட்டுள்ள விகாயையை அண்டிய பகுதிகளில் தமிழர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தெற்கிலிருந்து வரும் சிங்கள சுற்றுலா பயணிகள் தமது நிரந்தரமான வணிகத்துக்கும் தங்கிச் செல்வதற்குமான வசதிகள் இந்தவிகாரையை அண்மித்த பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகின்றன.

முள்ளிவாய்க்காலிருந்து தெற்குப் பக்கமாக முல்லைத்தீவு நோக்கி செல்லும் பாதையில் வட்டுவாகலின் தொடக்க இடத்தில் இந்த பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

இதனோடு இணைந்த ஊர்கள் பாரம்பரியமாக பண்டைக்காலம் தொட்டு வன்னித் தமிழரின் சமய மரபுகளைப் பின்பற்றி வருபவை. வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோயில், வட்டுவாகல், சப்தகன்னிமார் கோயில் போன்றன இதற்கு மிக அருகிலேயே அமைந்துள்ளன.

அண்மையில் திருகோணமலையிலும் மன்னாரிலும் தமிழர்களின் சைவ ஆலயங்களுக்கு அருகில் பௌத்த விகாரைகளை இலங்கை அரசு திட்டமிட்டு அமைத்து திறந்திருந்தது. யாழ்ப்பாணத்திலும் பரவலாக பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பௌத்த சமய நிகழ்வுகள் கூட பெருமெடுப்பில் சிங்கள மக்களால் யாழில் அனுஸ்டிக்கப்படுகின்றது. நைனாதீவில் உள்ள விகாரைக்குச் செல்லும் சிங்கள மக்களுக்கு சிறப்பு படகு சேவை மற்றும் வாகன சேவை சலுகைளும் கடற்படையினரால் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருக்கின்றன.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

பொலநறுவையில் தமிழ்க் கல்வெட்டு.......!


பொலநறுவையில் அமைந்திருக்கும் மூன்று ஆலயங்களில் உள்ள வாசிக்கப்படாத கல்வெட்டுக்களை பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் கண்டுபிடித்துள்ளார்.


பொலநறுவையில் மூன்றாம், ஐந்தாம் சிவாலயம் மற்றும் நான்காம் விஷ்ணு கோவில் என்பற்றில் இச் சாசனங்கள் கண்டுபடிக்கப்பட்டுள்ளன.


இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேராசிரியர் இந்த தகவலை தெரிவித்தார். இச்சாசனங்கள் பல வருடங்களுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

காலஓட்டத்தில் எழுத்துக்கள் இயற்கை காரணிகளால் சிதைவடைந்துள்ளன.



எனினும் நுட்பமான முறையில் படிமம் எடுக்கப்படும் பட்சத்தில் அவற்றில் எழுதப்பட்டிருப்பவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என பேராசிரியர் சி. பத்மநாதன் தெரிவித்தார்.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

சரித்திரத்தில் முதல் தமிழன்...............!

ரோகன் சம்பத் என்ற தமிழ் மாணவன் தான் உலகத்திலேயே அதிக மதிப்பெண் பெற்ற மாணவன். ஆம் ஐ சி எஸ் ஈ ( ICSE ) என்னும் தேர்வில் உலக அளவில் 99.5% சதவிகிதம் பெற்று அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிட்டியில் இ டம் கிடைத்திருகிறது.

இவரின் பெற்றோர் தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக மும்பாய் சென்று பின்பு பூனே வழியாக துபாய் சென்று 18 வருடங்களுக்கு முன் செட்டில் ஆனவர்கள்.

இந்த மாணவன் இந்த மார்க்கை எடுக்க டியூஷன் வைக்க வில்லையாம். டியூஷன் வைத்தால் தன் ஆசிரியருக்கு அவமதிப்பு செய்யும் செயல் என்று தானாகவே படித்து இந்த இடத்தை அடைந்திருக்கிறான்.

இவன் தாயார் கூறுகிறார் நான் அவனின் படிப்பில் கவலை கொண்டாலும் இவன் இரவு வெகு நேரம் விழித்திருந்து படித்ததில்லை 

மற்றூம் குருப் ஸ்டியிஸும் கிடையாது அது போக பரிட்சைக்கு ஒரு வாரம் முன்பு கூட பள்ளீயில் ஒரு இன்டர்னேஷனல் டிபேட் ஃபெஸ்டிவளுக்கு பிரசிடன்டாக இருந்த போது இவர்கள் பயந்துவிட்டார்களாம், பையன் எப்படி நல்ல மதிப்பெண்ணில் பாஸ் பண்ண போகிறான் என்று.

கனிதம் 100/100, பிஸிக்ஸ் 100/100, கம்ப்யூட்டர் சைன்ஸ் 100/100 ஆங்கிலம் 98 வாங்கி உலகத்தின் நெ 1 ஸ்டூடன்ட் ஆக இவன் ஆனதை அவன் படித்த துபாய் மாடர்ன் ஸ்கூல் ஆசிரியர்கள் கொண்டாடுகின்றனர்.

கடைசி டிப்ஸ் - இவன் ICSE - 2012ல் உலகலவில் அதிக மதிப்பெடுத்த மாணவன் மட்டுமல்ல, இந்த வரலாற்றில் இது வரை அதிக மதிப்பெடுத்த முதல் சரித்திர நாயகனும் இவன் தான்........


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

இரீயூனியனில் தமிழர்கள்....................!


பிரெஞ்சுத் தமிழ்க் குடியேற்ற நாடுகளான 27 தீவுகளில் ஒன்று ரீயூனியன். இத்தீவைத் தமிழில் ரீயூனியோன் என்றும் அழைக்கிறார் கள். இந்துமாக்கடலில் புவி மையக் கோட்டிற்குத் தெற்கே மடகாஸ்கர் தீவுக்கும் மொரீசியஸ் தீவுக்குமிடையில் உள்ள தீவே ரீயூனியன் (Reunion) ஆகும்.

மடகாஸ்கர் தீவிற்கு வடக்கே 480 கி.மீ தொலைவிலும் மொரீசியஸ் தீவிற்குத் தென் மேற்கே 200 கி.மீ தொலைவிலும் ரீயூனியன் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 2510 ச.கி.மீ ஆகும். இத்தீவு மொரீசியஸை விடச் சற்றுப் பெரியது.

இதன் தலைநகரம் செயிண்ட் டெனிஸ். இத்தீவு முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன் கடலில் வெடித்து உண்டான ஒரு பெரிய எரிமலை கக்கிய குழம்பால் உருவானது. எங்குப் பார்த்தாலும் மலைகளும் ஆறுகளும் பல்வகைத் தாவர இனங்களுமாய் இத்தீவு நெஞ்சையள்ளும் அழகுடன் திகழ்கிறது. ரீயூனியன் தீவு தற்சமயம் பிரான்ஸ் நாட்டில் கடல்கடந்த ஓர் அங்க நாடாக (French Overseas Department) விளங்குகிறது.

ரீயூனியனில் 18 ஆம் நூற்றாண்டில் 1797 ஆம் ஆண்டளவில் இருந்த மொத்த மக்கள்தொகை 56,800. வெள்ளையர்கள் 10,400; உரிமை பெற்ற மனிதர்கள் 1,600; அடிமைகள் 44,800 ஆகும். 1850 ஆம் ஆண்டளவில் ரீயூனியனில் இருந்த மொத்த மக்கள் தொகை 1,10,891 ஆகும். தமிழர்களும் 18 ஆம் நூற்றாண்டிலிருந்தே குடியேறி யிருந்தார்கள்.

இன்று ரீயூனியனின் மொத்த மக்கள் தொகை சுமார் ஐந்தரை இலட்சம். இதில் இரண்டு லட்சம் பேர் தமிழர்கள். இத்தீவு மண்வளமும் மழைவளமும் மிக்கது. இங்கே கோடையும் குளிருமாகிய இரண்டு பருவங்களே உண்டு.

அதிகக் குளிரும் அதிக வெப்பமும் இல்லாத மிதமான தட்ப வெப்ப நிலையே என்றும் நிலவுவதாலும் சுற்றிலும் கடல் சூழ்ந்திருப்பதாலும் மலைகளிலிருந்து பல்வகை மூலிகைகளின் மணம் எப்போதும் வீசுவதாலும், ஆங்காங்கே தாதுப்பொருட்கள் கலந்த நீரூற்றுகள் சுரந்து பாய்வதாலும் இந்தத் தீவானது மக்களின் நல்வாழ்வுக்கு இயற்கைத் தாய் அமைத்துக் கொடுத்த சுகாதார நிலையம் என்று போற்றப்படுகிறது.

இத்தீவு கி.பி. 1520 இல் போர்த்துக்கீசிய மாலுமியால் கண்டுபிடிக்கப் பட்டதாக நம்பப்படுகின்றது. பிறகு ஆங்கிலேயர் கையிலும் பிரெஞ்சுக்காரர் கையிலும் சிற்சில காலம் மாறிமாறியிருந்து கடைசியாக 1816 இலிருந்து பிரெஞ்சுக்காரர் கையில் நிரந்தரமாகத் தங்கி விட்டது.

பண்டைத் தமிழர்கள் இந்துமாக்கடலைக் கடந்து ஐரோப்பாவிற்கும் ஆப்பிரிக்க, மேற்கு ஆசிய நாடுகளுக்கும் சென்ற போது இத்தீவைப் பார்த்திருக்கலாம். ஆனால் தமிழர்களோ பிற இந்தியர்களோ 17 ஆம் நூற்றாண்டு வரை இத்தீவுக்குச் சென்று குடியேறியதாகச் சான்றுகள் கிடையாது.

ரீயூனியன் தீவை ஆரம்பத்தில் பண்படுத்த வேலையாட்கள் தேவையாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சு வெள்ளை முதலாளிகள் ஆப்பிரிக்காவின் காப்பிரி மக்களையும் மடகாஸ்கரின் பழங்குடி மக்களையும் அடிமைகளாக கொண்டு வந்து ரீயூனியனில் கரும்பு, சோளம், மணிலா முதலியவற்றைப் பயிரிட்டனர்.

சர்க்கரை ஆலைகளிலும் அவர்களை வேலை வாங்கினார்கள். 1848 இல் பிரெஞ்சுப் பேரரசில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதால், வெள்ளை முதலாளிகள் வேறு வழியின்றித் தங்கள் அடிமைகளை விடுதலை செய்து விட வேண்டியதாயிற்று. எதிர்பாராத இந்த விளைவினால் இத்தீவின் பொருளாதார முதுகெலும்பே ஒடிந்து போய்விட்டதாக 1850 இல் இங்குப் பிரயாணம் செய்த ஆங்கிலேயர் ஃபிரடரிக் என்பவர் தம் ரீயூனியப் பயண நூலில் குறிப்பிடுகிறார்.

கரும்புச் சாகுபடியை வெகுவாகப் பெருக்கிச் சர்க்கரை விற்பனையில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டிருந்த வெள்ளை முதலாளிகளை இந்த அடிமையொழிப்புச் சட்டம் திக்குமுக்காடச் செய்து விட்டது. அதனால் உடனே இந்தியாவின் பிரெஞ்சுப் பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால் போன்ற நகரங்களிலிருந்தும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் தமிழர்களை பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் காலனியாட்சி பலத்துடன் ரீயூனியனுக்கு ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் சென்றார்கள்.

ஆனால் 1828க்கு முன்னமேயே சில இந்தியர்கள் கோவா பக்கத்திலிருந்து (மலையாள கரையோரம்) அடிமைகளாகவே வந்திருந்தனர் என்று தெரிகிறது. 1828 இல் ஆந்திராவிலிருந்தும் 15 பேர் வந்தனர் என்னும் குறிப்புகள் உள்ளன.

இவ்வாறாக 1848க்கு முன் இங்கிருந்த இந்தியர்களின் எண்ணிக்கை மொத்தம் 4200 தான். இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் அவ்வெல்லாரையுமே வெள்ளைத் துரைமார்கள் தமிழர்கள் என்றே பொதுவாகக் குறிப்பிட்டனர்.

அதற்குக் காரணம் அந்தக் காலத்தில் காரைக்கால், புதுச்சேரி ஆகிய இரு பிரெஞ்சிந்திய வட்டாரங்களிலிருந்து வந்த தமிழ் ஒப்பந்தக் கூலியாட்களே எண்ணிக்கையில் மிகப் பெரும்பான்மையினர். அவர்களே கரும்புத் தோட்டங்களிலும் சர்க்கரை ஆலைகளிலும் வேலை செய்தனர்.

அவர்களே முதலாளிகளின் வீடுகளில் சமையல்காரர்களாகவும், மெய்க்காவல்காரர்களாகவும் வேலைகளை மேற்பார்க்கும் மேஸ்திரிகளாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இப்படியாக வந்தவர்களில் மிகச்சிலரே தங்கள் ஒப்பந்தம் முடிந்து தாயகம் திரும்பினர். ஏனையோர் இங்கேயே தங்கி விட்டனர். அதற்கு முக்கிய காரணம் இங்கேயே தொடர்ந்து வசிப்பவர்கள் இந்த நாட்டின் குடிமக்களாவர் என்ற அரசாங்க சட்டமும், சாதீய வேறுபாட்டுத் தாழ்வுணர்ச்சியின்றி எல்லோரும் சமமாக வாழும் சமரச வாழ்க்கை முறையும், வேலை நிச்சயமும், கூலி நிச்சயமும் ஆகும்.

1946 வரையில் பிரெஞ்சுக் காலனியாக இருந்து வந்த இத்தீவு 1947 இல் 'பிரெஞ்சு நாட்டின் கடல் கடந்த அங்க நாடு' என்று சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அன்று முதல் பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு என்னென்ன குடியுரிமையுண்டோ அத்தனையுரிமைகளையும் இங்குள்ள யாவரும் பெற்றுப் பிரெஞ்சுக் காரர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு வெள்ளையினக் கிரியோல், தமிழர், ஆப்பிரிக்க நாட்டுக் காப்பிரியர்கள், மலகாஷ், கொமோர் தீவுகளின் மக்கள், சீனர்கள், வியாபாரம் நிமித்தம் கடைசியாக இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்த இந்திய குஜராத்தி முஸ்லீம்கள் ஆகிய பல இனத்தவரும் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழரின் இன்றைய நிலை சமயம் :

இடைக்காலத்தில் ரீயூனியன் தமிழரின் திருமணம், சவ அடக்கம் ஆகிய சடங்குகள் கிறித்துவ முறையில் நடந்தது குறைந்து இப்பொழுதெல்லாம் இந்து சமய முறைப்படி நடப்பது பெருகி வளர்ந்து வருகின்றது. பெற்றோர் மணம் பேசுவதென்பதில்லை. பெண்ணும் பிள்ளையும் சந்தித்துப் பழகிய பிறகு, பெற்றோருக்கு அறிமுகமாகிப் பின்னரே இரு வீட்டினரும் இணைந்து திருமணம் முடித்து வைக்கின்றனர். வரதட்சிணை முறை இங்கில்லை. திருமணச் செலவை இரு வீட்டாரும் சமமாகப் பகிர்ந்து கொள்கின்றனர்.

பிறந்த குழந்தைக்கு உரிய காலத்தில் முடியிறக்கித் தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவது வழக்கமாய் உள்ளது. ஆனால், காதுகுத்துதல் வழக்கொழிந்து விட்டது. இறந்தவர்களைக் கல்லறையில் அடக்கம் செய்வதே பின்பற்றப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு கோயிலுண்டு. சிவன், முருகன், காளிக் கோயில்கள் அதிகமுண்டு.

தலைநகரமான செயிண்ட் பியரி (Saint Andre) முதலிய இடங்களில் முருகன் கோயில்கள் இருக்கின்றன. சிவ, திருமால் கோயில்களில் தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட குருக்கள் பணியாற்றுகின்றனர். 1980 இல் மொரீசியஸ் தமிழ் மொழி விழிப்புக்குப் பின் சில தமிழ்ப் பண்டாரங்கள் ரீயூனியன் கோயில் களில் தமிழில், வடமொழியில் அர்ச்சனை செய்கிறார்கள். அதற்கு முன்பு பிரெஞ்சு மொழிதான் இத்தீவில் உள்ள தமிழர்கள் கோயில்களின் ஆட்சிமொழி.

ரீயூனியன் தமிழர்களிடையே பெரும்பாலும் கிராமத் தேவதை வழிபாடே அதிகமாகக் காணப்படுகிறது. டிசம்பர், ஜனவரி, சூலை மாதங்களில் திரௌபதையம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. பெண்கள் தீக்குழியினைச் சுற்றி வலம் வருவதோடுசரி; தீ மிதிப்பதில்லை. மாரியம்மனுக்கு மே, சூன் மாதங்களில் கஞ்சி ஊற்றுத் திருவிழா நடைபெறுகின்றது.

காளியம்மனுக்கு டிசம்பர், ஜனவரி, சூலை மாதங்களில் ஆட்டுக்கடா, கோழி முதலியன பலி தந்து விழா கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இந்த விழாக்கள் பத்து நாட்களுக்குக் குறையாமல் கொண்டாடப்படுகின்றன. பொதுக் கோயில்கள் மட்டுமல்லாமல், கிராமங்களில் ஒவ்வொரு வீட்டின் தோட்டத்திலும் காளி, மாரி, முனி, வீரன், கருப்பு முதலிய தேவதைகளுக்குச் சிறு கோயில்கள் எழுப்பி மாதந்தோறும் வழிபாடு செய்து வருகின்றனர். இது இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற சுவாமி அறை பூசையை ஒத்திருக்கின்றது.

நகரங்களில் உள்ள சிவசுப்ரமணியர், பெருமாள் ஆகிய தெய்வங்களின் கோயில்களில் ஆண்டுதோறும் பத்துநாள் உற்சவம் நடைபெறுகின்றது. அப்போது ஏராளமான மக்கள் நாள்தோறும் கோயிலுக்கு வந்து வழிபாடுகளில் பங்கேற்கின்றனர். முருகன் கோயிலாக இருந்தால் புரட்டாசி மாதம் முழுவதும் சனிக்கிழமை தோறும் பெரிய அளவில் விழாவெடுத்துக் கோவிந்தனை வழிபடுகின்றனர்.

கிருஷ்ண பிறப்பு (ஜெயந்தியையும்) இரவு முழுவதும் கண்விழித்து அவனது வரலாற்றினைப் பக்தியுடன் கேட்டு மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர். திருவிழாக்களின் போது சாமி ஊர்வலமும், சக்தி கரக ஆட்டங்களும், அலகு குத்தி ஆடுவதும் சிறப்பாக நடைபெறும். ஊர்வலத்தின் போது பக்தர்கள் வீடுதோறும் தீபாரதனை செய்வார்கள்.

தமிழ்க் கிறித்துவர்கள் நீண்ட கவுன்களும் மேக்சிகளும் அணிந்து வந்து இந்துக் கோயில்களில் தவறாமல் வழிபடுகிறார்கள். ரீயூனியன் தமிழர்கள் தைப் பொங்கல், தீபாவளி, தமிழ் வருடப்பிறப்பு ஆகியவற்றை கோயிலில் கொண்டாடுகின்றனர். இந்நாட்களில் சூரியனுக்குச் சிறப்பான பூசைகள் நடக்கின்றன. பிரதி வருடமும் சூலை 14, நவம்பர் 11, டிசம்பர் 20 ஆகிய நாட்கள் தேசிய விழா நாட்களாக அரசாங்கத்தாலும் பொதுமக்களாலும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

தொழில்:

தமிழர்கள் அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டிருக்கின்றனர். கரும்பு தோட்ட வேலை, கட்டிடக் காண்டராக்ட், சாலைக் காண்ட்ராக்ட், பஸ், லாரி போக்குவரத்து ஆகியவற்றிலும், சிமெண்டு உற்பத்தித் தொழிற்சாலை, கருங்கல் சல்லி தயாரிப்புத் தொழிற்சாலை முதலியவற்றிலும் தமிழர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர்.

முசு(ஸ்)லீம்களும் சீனர்களும் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பது போலத் தமிழர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மக்களுக்குத் தேவைப்படும் இன்றியமையாப் பொருள்களை இங்கேயே உற்பத்தி செய்வதைக் காட்டிலும், வெளியிலிருந்து தருவிக்கப்படுவது மிகவும் விலை சகாயமாக அமைவதால், இங்குப் பெரிய தொழிற்சாலைகள் நிறுவப்படுவதில் போதிய அக்கறையோ அவசியமோ இது வரையிலும் ஏற்படவில்லை.

சர்க்கரை ஆலைகள் மட்டும் நவீன மயமாக்கப்பட்டுப் பெரிய அளவில் நடந்து வருகின்றன. சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழர்களில் 28 சதவீததினர் அரசியல், தொழில், வாணிபத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெட்டிவேர், வன்னிலா, ஜெரானியம் போன்ற வாசனைப் பயிர்த் தொழில் வளர்ச்சிக்கும், கைவினைப் பொருள் உற்பத்திக்கும், பேரளவு தேன் உற்பத்திக்கும், மீன் பிடிப்பிற்கும் அரசாங்கம் பெருமளவில் உதவி புரிகிறது. பிரான்ஸ’லே படித்த பிரெஞ்சு மொழி பேசும் படித்த தமிழர்கள் மருத்துவர்களாகவும் வழக்குரைஞர்களாகவும் ஆசிரியர்களாகவும் விரிவுரையாளர் களாகவும் பணிபுரிகின்றனர்.

வாழ்க்கைத்தரம் :

1947இல் இத்தீவு பிரான்சின் அங்க நாடாக மாறியதிலிருந்து இங்குள்ளோரின் வாழ்க்கைத்தரம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. பிரான்ஸ் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் அத்தனைச் சலுகைச் சட்டங்களும் இங்கும் அப்படியே நடைமுறைக்கு வருவதால் இதனைச் சுற்றிலும் உள்ள நாடுகளின் வாழ்க்கைத் தரத்தைக் காட்டிலும் ரீயூனியன் மக்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்து காணப்படுகின்றது.

இங்குக் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமே நாலாயிரம் பிராங் (சுமார் 7500 ரூபாய்). வேலை செய்யும் அத்தனை பேரும் கார் வைத்திருக்கின்றனர். உலகிலேயே அதிக விகிதத்தில் கார் விற்பனையாகும் இரண்டாவது இடம் ரீயூனியன்தான். சட்ட மன்றங்களில் தமிழர்களில் சிலர் அங்கம் வகிக்கின்றனர்.

பிரான்சில் உள்ள சட்ட மன்றங்களிலும் தமிழர்கள் சிலர் அங்கம் வகிக்கின்றனர். இங்கு ஏறக்குறைய எல்லோர் வீடுகளிலும், தொலைக்காட்சியும் தொலைபேசியும் உண்டு. சுருக்கமாகச் சொன்னால், மக்கள் சகல வசதிகளுடனும் வாழ்கின்றனர்.

வேலையற்றிருக்கும் படித்த இளைஞர்கள் முதல் தளர்ந்து விட்ட முதியோர் வரை, குடிமக்களுக்கு அரசாங்கம் பல வகையிலும் உதவித் தொகை அளிப்பதால் வறுமையென்பதற்கே இங்கு இடமில்லை. அருகிலுள்ள மொரீசியஸ் தீவைவிட இங்கு வாழ்க்கைத்தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

உணவு :

விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர்தாம் அண்மை சில ஆண்டுகளாக உணவில் சைவமாக இருக்கின்றனர். மற்றையோர் அனைவரும் அசைவ உணவுப் பழக்கமுடையவர்களே. தமிழர்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை. பெரும்பாலான தமிழ்நாட்டுப் பலகாரங்கள் இங்கு மறந்து போய் விட்டன.

ரொட்டியும் வெண்ணெயும் காலைச் சிற்றுண்டி. பெரும்பாலும் ஐரோப்பிய நாட்டு உணவுப் பழக்க வழக்கங்களே இங்கு அதிகம் இடம் பெறுகின்றன. கோயில் திருவிழாக்களின் போதும், மதச் சடங்குகள், வீட்டுப் பண்டிகைகளின் போதும் ஓரளவு தமிழ்ச் சமையல் முறை கையாளப்படுகிறது.

உடை :

இங்குள்ள தமிழர்கள் பொதுவாக மேலை நாட்டுப் பாணியிலேயே உடையணிகின்றனர். இந்துக் கோயில் திருவிழாக்களிலும், தமிழ்ச் சமய திருமணச் சடங்குகளிலும் ஆர்வமுள்ள இளைஞர் பலர் வேட்டி, சட்டை அல்லது ஜிப்பா அணிந்தும், பெண்களில் பலர் புடவை, ரவிக்கை அணிந்தும் தமிழ்க் கலாச்சாரத்தை வெளிப்படுத்து கின்றனர். பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, விரதம், தீமிதிப்பு முதலிய விழா நாட்களின் போது பெண்கள் புடவையும் நகைகளும் அணிந்து கொள்கிறார்கள்.

வீடு :

சிறிய வீடாக இருந்தாலும், அதனைச் சுற்றி அழகிய பூந்தோட்டம் அமைத்துப் பராமரிப்பதிலும், வரவேற்பு அறையினைப் பூஞ்சாடிகளால் அலங்கரிப்பதிலும், வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பதிலும் இவர்கள் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் காட்டுகின்றனர். வார விடுமுறை நாட்களைக் குடும்பத்துடன் இயற்கை காட்சிகள் நிறைந்த வெளியிடங்களுக்குச் சென்று, உண்டு, களித்து ஓய்வெடுப்பதன் மூலம் கழிக்கின்றனர்.

தமிழின் நிலை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குடியேறியத் தமிழர்கள் பிரெஞ்சு முதலாளிகளின் நம்பிக்கைப் பெற்றவர்களாகப் பணிபுரிந்த போது, ரீயூனியன் எங்கும் தமிழ்மயமாக இருந்து, தமிழர்களுக்கும் பிரெஞ்சுக் காரர்களுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றம் நிமித்தம் பிறந்ததே கிரியோல் (Creole) என்னும் கொச்சை மொழி. இம்மொழியில் சொற்கள் பிரெஞ்சுச் சொற்களாகவும் கருத்து வெளியீடு தமிழ் முறையாகவும் இருப்பதால் இந்தக் கிரியோல் அன்றைய தமிழ்மக்களின் படைப்பேயாகும்.

இப்போது உள்ள ரீயூனியன் தமிழர்கள் தமிழை மறந்து விட்டனர். அனைவரும் கிரியோல் மொழியே பேசுகின்றனர். கிரியோல் மொழி ரீயூனியனின் தேசிய மொழியாக விளங்குகிறது. படித்தவர்கள் மட்டுமே பிரெஞ்சு மொழி பேசுகின்றனர். பிரெஞ்சு மொழி பணித்துறை, அலுவலக மொழியாக விளங்குகிறது. பொதுவாக 100க்கு 95 தமிழர்களுக்கு தமிழ் எழுதவோ படிக்கவோ பேசவோ தெரியாது. பாரீஸ்-புதுவை தொடர்புள்ள ஒரு சிலர் தமிழ் பேசுகின்றனர்.

இன்றைய ரீயூனியன் தமிழர்கள் கல்வியில் முதன்மையிடம் வகிக்கிறார்கள். மருத்துவர்கள், சட்ட மேதைகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பொறியியல் வல்லுனர்கள் என்று எல்லா நிலையிலும் இவர்கள் உயர்ந்து விளங்குகிறார்கள்.

கல்வித் துறை முதல் மற்றெல்லாத் துறைகளிலும் தமிழர்கள் தங்கள் கல்வித் திறமையால் மேன்மை வகிக்கிறார்கள். இங்கு இலவசக் கல்வி அனைவருக்கும் வழங்கப்படுகிறது. பதினெட்டு வயது வரை பிள்ளைகள் அனைவரும் பள்ளி செல்ல வேண்டும். இல்லையேல் பெற்றோர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும்.

இங்கு பிரெஞ்சு மொழியே பயிற்று மொழி. இதையடுத்து ஆங்கிலமும், ஏதாவதொரு ஐரோப்பிய மொழியும் (ஜெர்மன், ஸ்பானிஷ்) கட்டாயமாகப் படிக்கப்பட வேண்டிய மொழிகளாகும். அண்மை காலமாகத் தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் செயின்ட் ஆண்டிரி (Saint Andre) யிலுள்ள மூன்று உயர்நிலைப் பள்ளிகளிலும், அவற்றுடன் இணைந்து செயல்படும் செயின்ட் பனுவா (Saint Benoit) விலுள்ள ஒரு கல்லூரியிலும் விருப்பப் பாடமாகத் தமிழ் கற்பிக்கப் படுகிறது.

இதுவன்றி, பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமாகிய Institute of Linguistics and Anthropology இல் பதினெட்டுவயது மேற்பட்டோருக்குத் தமிழ் போதிக்கப்படுகிறது. இதனால் ரீயூனியனில் தமிழின் நிலை மேம்பட்டு வருகிறது. பிரெஞ்சு மொழியில் பேராசிரியராக வளர்ந்துள்ள திரு.வி.தேவக்குமாரன் பல ஆண்டுகளுக்கு முன் தமிழ் பிரெஞ்சுப் பாடநூல் எழுதிப் படிப்பிக்கச் செய்தார்.

அவர் எழுதிய நூலின் பெயர் IJ 'appreds le tamoul ஆகும். அவர் ஓர் தமிழாசிரியர். ரீயூனியனில் தமிழ் கற்பித்த முதல் தமிழாசிரியர் மொரீசியஸைச் சேர்ந்த திரு. சங்கிலி (Sangeelee) என்பவர் ஆவார். பிரெஞ்சு மூலம் தமிழ் படிக்க, பாலர் பாடநூல் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. 

பாலர் பயிற்சிக் கூடம் முதல் மேல்நிலைக் கல்லூரி வரையில் கல்வி இலவசமே. மாணவர்க்கு மதிய உணவும், போக்குவரத்து வசதியும் இலவசம். ஊக்கத் தொகையும் குடும்ப வருமானத்திற் கேற்ப அளிக்கப்படுகிறது. அனைத்து வித பட்டப்படிப்பும், மேல்நிலை பட்டப்படிப்பும், தொழில் நுட்பக் கல்வியும் பெறுவதற்குரிய கல்வி நிலையங்கள் இங்கேயே உள்ளன.

இவற்றிற்கு மேல்பட்ட கலைத் திறக்கல்விக்கும், அறிவியல் மற்றும் பொறியியல் உயர்நுட்பக் கல்விக்கும், மருத்துவப் படிப்பிற்கும், மேல்நிலைச் சட்டக் கலைத் திறக் கல்விக்கும்தான் பிரான்சுக்குச் செல்ல வேண்டும். பட்டப்படிப்பு வரை ஆண்டுதோறும் வடிகட்டும் தேர்வுமுறை இங்கில்லை. மாணவர் தம் தரத்திற்கேற்ப தொழில் கற்க அவர்களுக்குக் கல்வி நிலையத்தால் வழிகாட்டப்படுகின்றது.

பிறவியிலேயே உடல் ஊனமுற்றவர்களுக்கும், மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கும் உரிய பயிற்சியளிக்கும் கூடங்கள் ஆங்காங்கே உள்ளன. ஒரு வகுப்பில் எந்த நிலையிலும் இருபத்து நான்கு மாணவர்களுக்கு மேல் சேர்க்கப்படுவதில்லை. பயிற்று முறையில் ஒலி, ஒளிப் பொறிகளும் முக்கிய இடம் வகிக்கின்றன. மற்றும் தொலைக்காட்சி, ஒலி, ஒளிப் பதிவு நாடாக்கள், பஜனைப் பாராயணம், கோயில் ஆகியவற்றிலும் தமிழைப் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்.

மறந்த தமிழை மீண்டும் மலரச் செய்யும் வாய்ப்புகளும் எண்ணமும் ரீயூனியன் தமிழரிடையே வேரூன்றத் தொடங்கி இருக்கிறது. தமிழ் மொழி மீதான ஆர்வம் இதன் மூலம், குறிப்பாக இளம்பரம்பரை யினரிடையே மேலும் வளர்ச்சியடைய சூழ்நிலை உருவாகி யிருக்கின்றது. தமிழ்ப் பண்பாட்டையும் ரீயூனியன் தமிழர்கள் முற்றிலும் இழக்கவில்லை.

பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டும் போது தமிழ் இந்துப் பெயர்களையே வைக்கிறார்கள். அரங்கசாமி, இராமாசாமி, கிருட்டிணன், இராமன், முருகன், கணேசன் என்றப் பெயர்களை எங்கும் கேட்கலாம். காத்தாயி, முருவாய், இராமாய், மீனாட்சி, மீனா, மைனாவதி, காமாட்சி போன்ற பெயர்களும் அதிகமாக உள்ளன. பெரும்பாலோருக்கு தமிழ்ப் பெயர்களோடு கிறித்துவப் பெயர்களும் (First Name) உண்டு. உதாரணமாக பிலிப் இராமன் (Philip Raman).

ரீயூனியன் சட்ட மன்றத்தில் சில தமிழர் இருக்கின்றனர். சம உடைமைக்கட்சி, தொழிற்கட்சிகளில் பெரும்பான்மை தமிழர்கள் அங்கம் வகிக்கிறார்கள். பிரான்சின் அங்க நாட்டுக்கான நாடாளு மன்றத்தின் ரீயூனியன் பகுதிக்கு உரிய ஐந்து உறுப்பினர்களில் (Five deputies) ஒருவர் தமிழர்; இவர் பெயர் வீராப்பாபிள்ளை. இவருக்குத் தமிழ் தெரியாது. மேலும் ரீயூனியனிலிருந்து செல்லும் மூன்று சட்டமன்ற மேலவை உறுப்பினர்களில் (Senators) இருவர் தமிழர்கள்.

தகவல் தொடர்பு சாதனங்கள்:

1965 ஆம் ஆண்டு ரெனிகிசனின் (Rene Kichenin) எனும் வழக்குரைஞர் 'திரிடென்ட்' (Trident) என்ற நாளேட்டை வெளியிட்டார். இவ்வேட்டின் நோக்கம் தமிழ் மொழியை தமிழ்ப்பண்பாட்டை மேம்படுத்துவதாகும். 1968 ஆம் ஆண்டு இளைஞர்களுடன் இணைந்து தமிழ் கிளப் (Club Tamoul) ஒன்றை அமைத்தார். 1977க்கு முன் தமுல் (Tamil) என்ற பிரெஞ்சு மொழி ஏடு வெளிவந்துக் கொண்டிருந்தது.

1980 இலிருந்த பிரசென்ஸ் (Presence) என்ற பிரெஞ்சு ஏடு தமிழர்களைப் பற்றியும், தமிழர்கள் பண்பாடு, கலாச்சாரம், சமயம், பண்டிகை போன்ற வற்றைப் பற்றி முக்கியக் கட்டுரைகளையும், முக்கியத் திருவிழாக் களின் அட்டவணைகளைப் பற்றியும் எழுதி வெளியிடுகின்றது. 1975-1982 ஆம் ஆண்டுகளிடையே இவ்விரண்டு செய்தி ஏடுகளும் வெளியிடப்பட்டன. தினந்தோறும் 'ஒளி' என்ற தமிழ் ஏடு அச்சாகி விற்கப்படுகின்றது. இந்த ஏட்டின் முகப்பில் தில்லை நடராசர் நாட்டியச் சின்னமுண்டு.

1981 ஆம் ஆண்டு இறுதியில் சிறீ பெருமாள் வானொலி தமிழ் ஒலிபரப்பு தொடங்கியுள்ளார். இது ஒரு தனியார் ஒலிபரப்பு. செயிண்ட் பியாரையில் உள்ளது. மொரீசியஸ் வானொலி தொலைக்காட்சிகளை ரீயூனியனில் பார்க்கலாம். ஆகையால் அங்கிருந்து திரையிடப்படும் தமிழ்ப்படங்களை ரீயூனியன் தமிழர்கள் பார்க்கின்றார்கள். வாரந்தோறும் அங்கிருந்து தமிழ்ப் பாடல்களைக் கேட்கிறார்கள்.

திரு. தண்டபாணி என்பவரும், மற்றும் பலரும் தமிழ்மொழி, பண்பாடு முதலியவற்றைப் பற்றி நூல்கள் எழுதி இருக்கிறார்கள். தமிழ் பிரெஞ்சுப் பண்பாட்டு மையத்தின் தலைவரும், கலைவாணி தமிழ் வானொலி பரப்பின் முன்னாள் இயக்குனருமான திரு.ஜெயபார்லென் பெர்மாள் என்பவர் ரீயூனியனில் தமிழ்ப் பண்பாடு வளர்ச்சியடை வதற்காகவும், பாதுகாக்கப்படுவதற்காகவும் சிறப்பாகப் பாடுபடுகிறார்.

வானொலி வெள்ளி (Redio Velly) இயக்குநரான பொனின் பரசூர்மென் தமிழ் ஒலிபரப்பு செய்கின்றார். இவரும் தமிழ்ப் பண்பாட்டின் மேம்பாட்டிற்காகப் பெரிதும் பாடுபடுகின்றார். ரீயூனியன் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் வி.குமாரசாமி (President. Institute De Linguistidue Et D' Anthroplogie) அவர்களும் தமிழ்மொழியின் வளர்ச்சி, தமிழ்ப் பண்பாட்டின் மறுமலர்ச்சிக்காக சிறப்பாகப் பணிபுரிகின்றார்.

தமிழக உறவு நாடும் ரீயூனியன் தமிழர்கள் :

தமிழ் மொழியினை இத்தீவில் இன்னும் பரவலாகக் கற்பித்துப் பரப்ப போதிய அளவு தமிழாசிரியர்களையும், தமிழ் நாட்டுக்கே உரிய நாதஸ்வர, பரதக் கலைகளைக் கற்றுக் கொடுக்கும் இசை, நடன ஆசிரியப் பெருமக்களையும் அனுப்பி வைக்க தமிழ்நாட்டின் பேருதவியினை இங்குள்ள தமிழர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தமிழ்நாட்டுக் கலைகள், கோயில்கள், நகர மற்றும் நாட்டுப்புற வாழ்க்கை முறைகள், விழாக்கள், பண்டிகைகள் ஆகியவற்றைப் பற்றிய செய்திப்படங்களை அனுப்பும்படி வேண்டுகின்றனர். ரீயூனியனில் உள்ள இளைஞர்கள் தமிழகம் வந்து கலாச்சார, பண்பாட்டுத் துறைகளில் நேரடி அனுபவம் பெறுவதற்கு வேண்டிய உதவிகளை எதிர்பார்க்கிறார்கள்.

கட்டுரைக்கு உதவிய நூல்கள்:

1. பாரெல்லாம் பறந்த தமிழர்-உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (1994).
2. அயல்நாடுகளில் தமிழர்-முனைவர். எஸ். நாகராஜன்.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.


Tuesday 22 May 2012

தமிழனாய் பிறக்க, என்ன தவம்..................!

தமிழனாய் பிறக்க, எந்த ஜென்மத்தில், என்ன தவம் செய்தோமோ !

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."

கணக்கதிகாரம் விளக்கம் :

பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல..

சிறையிலிருந்தே கல்வியில் சாதனை .......!















ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கு கயிறை எதிர் நோக்கி இருக்கும் பேரறிவாளன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு சிறையில் இருந்தபடியே எழுதினார். தேர்வு முடிவு இன்று வெளிவந்தது.

அதன் விவரம் வருமாறு.

தமிழ் - 185
ஆங்கிலம் - 169
வரலாறு - 183
பொருளாதாராம் - 182
வணிகவியல் - 198
கணக்குப் பதிவியல் - 179

மொத்தம் - 1096


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல..

Monday 21 May 2012

ஆயூத ....போரா.... மெளனிக்க....






















உலகமே எம்மினத்தை அளித்தற்கு முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டினுள் தமிழீழம் இருந்தபோது தமிழ் ஈழத்தின் எப்பிரதேசத்திலும் மக்கள் வயது, பால் வேறுபாடின்றி சுதந்திரமாக எந்நேரத்திலும் நடமாடினார்கள்.

ஆனால் இப்பொழுதோ தமிழர் பிரதேசமெங்கும் இராணுவ மயமாக்கப்பட்டு அடிமைகளாக எவ்விதசுதந்திரமும் இல்லாமல் குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது சுதந்திரமற்ற நிலையைக் கொண்டு வாழ்கிறார்கள்.

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் விடுமுறைக்கு தாயகத்திற்கு பயணத்தை மேற்கொள்ளும் புலம்பெயர் தமிழர்களின் கொடுமையோ தாங்கொண்ணாது .

ஏன் என்றுகேட்கின்றீர்களா இவர்கள்தான் தங்களுடைய பயணங்களின் பின் தாயத்தையும், தாயக மக்களைப் பற்றி இழிவாக பரப்புரை செய்வதும், அங்குள்ள மக்களின் நிலைப் பாட்டிற்கு ஏற்றவாறு தமது விடுமுறையை அனுபவிக்காது.

தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி விடுவதோடு மடுமல்லாமல் புலம்பெயர் தமிழ் சமூகத்தையும் குழப்புகின்றார்கள்.தாயகமும், தாயகமக்களும் வாழ்வியலின் உச்சநிலையில் வாழ்வதைப் போன்று பிரச்சாரம் செய்வதாகும்.

இன்னிலையை மாற்றி தமிழ்ஈழ தாயகம், மக்கள் அனைவரிற்கும் விடிவினை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளை, பங்களிப்பினை தொடர்ந்து செயவோம்.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல..

Sunday 20 May 2012

ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் தமிழ் மாணவன்!!!

லண்டனில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் தமிழ் மாணவன்!!!















லண்டனில் நடைபெறவிருக்கும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்காக, போட்டி ஆரம்பிப்பதற்கு முன் ஏந்தப்படும் தீபத்தினை ஏந்துவதற்காக தெரிவானவர்களுள் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவன் ஒருவனும் தெரிவாகியுள்ளான்.

மருகேசப்பிள்ளை கோபிநாத், வயது 21. இவர் ஒரு இலங்கை தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

மல்லாவியைச் சேர்ந்த இம்மாணவன் நியூகாஸ்டல் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மருத்துவ பீடத்தில் கல்விபயின்று வருபவர்.

ஒலிம்பிக் வரவேற்பு நடைபெற்ற போதும் எத்தனையோ மொழிகளுக்குள்ளும் முதலில் "வணக்கம்" என தமிழிலேயே ஆரம்பிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இத் தீபம் அலுமினியத்தில் செய்யப்பட்டுள்ளது. இத்தீபத்தில் 8000 துவாரங்கள் போடப்பட்டு இருக்கின்றன.

8000 துவாரங்கள் போடப்பட்டுள்ள இத்தீபத்தினை 8000 வீரர்கள் 8000 மைல்கள் ஓட இருக்கின்றார்கள். அவர்களுள் ஒருவர் மேற்படி தமிழ் மாணவன் என்பது குறிப்பிடத்தக்க பெருமைக்குரிய விடயம்.

இத்தீபத்தை ஏந்துவதற்காக தன்னையும் தெரிவுசெய்தமையால் தான் ஆச்சரியப்பட்டதாகவும் நன்றி கூறியதாகவும் கோபிநாத் தெரிவித்திருந்தார்.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.

Saturday 19 May 2012

புலித்தேவன் .................!




தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல..

வரலாறு மீட்டெடுப்பு நடக்கா.........!























(எல்லாளனின் சமாதி) 

எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன்.

இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது.

இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சம் குறிப்பிடுகின்றது.

மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ நாட்டைச் சேர்ந்த ஒருவன் ஆவான்.

தமிழனின் வரலாறு மாற்றப்பட்டால் கூட பரவாயில்லை. தமிழனுக்கு வரலாறே இல்லை என்று மக்களிடம் பரப்புகிறார்கள் தோழர்களே.

இனியும் வரலாறு மீட்டெடுப்பு நடக்காவிட்டால் நம் பாரம்பரியமிக்க எல்லாம் அழிந்துபோய்,... தமிழன் வரலாறு இல்லாதவனாக மாறிவிடுவான்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல..

500,000 தமிழ்ச்சொற்கள் ...............!

உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி ?உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது? ஆங்கிலமா? என்று பலரும் கேட்கிறார்கள். ஆக்ஸ்போர்டு (Oxford) அகரமுதலி ஒரு பக்கத்தில் இந்த கேள்வியை எழுப்பி விடையும் தந்துள்ளனர்.


20 தொகுதி கொண்ட ஆக்ஸ்போர்டு அகரமுதலியில் 171,476 சொற்கள் உள்ளன.

ஆனால் மொத்தம் 250,000 சொற்களுக்குக் குறையாமல் இருக்குமாம்.

சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் முக்கால் மில்லியன் (750,000) இருக்கலாம்.

ஆனால் தமிழில் 12,000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியில் ஏறத்தாழ 500,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன.

இந்த அகர முதலியில் மொத்தம் 31 தொகுதிகள். 37 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கப்பட்ட தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் (Tamil etymological Dictionary project) அண்மையில் முழுமையடைந்தது.

பாவாணர் தொடங்கிய இத்திட்டம். பேராசிரியர் இரா.மதிவாணன் தலைமையில் இப்போது முழுமை பெற்றுள்ளது,உலகில் வேறெந்த மொழிகளுக்காவது இத்தனை (ஏறத்தாழ 500,000) சொற்களின் சொற்பிறப்பியலோடு அகராதிகள் இருப்பதாகத் தெரியவில்லை.

(நன்றி இரா.செல்வகுமார்) மூத்த தமிழறிஞரான மதிவாணன் என்.அசோகனுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்...

இந்த சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தில் நீங்கள் எப்படி இணைந்தீர்கள்?

ஒரு சொல்லின் வேரை ஆராய்வதற்கு பலமொழி அறிவு தேவை. எனவே சேலம் கல்லூரியில் பணிபுரிந்த எனக்கு பல மொழிகள் எழுதப் படிக்கத் தெரியும் என்பதால் பாவாணர் அவர்களிடம் இத்திட்டத் தில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது.

இன்று 37 ஆண்டுகள் இப்பணியில் கழித்தும் உள்ளேன். வட இந்திய மொழிகளில் உள்ள பல வினைச்சொற்களின் மூலம் தமிழாக உள்ளது.

தமிழ்தான் வேர். இந்தியில் நாளை வா என்பதை ‘கல் ஆவோ’ என்கிறார்கள். கல் என்றால் நாளை. இந்தச் சொல் சமஸ்கிருதம், பெர்சியனில் இல்லை.

குஜராத்தியில் இதை கால் ஆவோ என்கிறார்கள். ஒரியாவில் காலி ஆவோ என்கிறார்கள். தமிழில் காலையில் வா என்கிறார்கள். ஆக, இந்த காலைதான் இப்போது கல் ஆகியிருக்கிறது.

எனவே வட இந்தியா முழுக்க ஒரு காலத்தில் தமிழ் பேசுகிறவர்கள்தான் இருந்தனர் என்றும் காலப்போக்கில் அது பிராகிருதமாகவும் பாலியாகவும் திரிந்தபோது சொற்கள் திரிந்துபோய்விட்டன என்று கூறலாம்.

அந்தச் சொற்களுக்கு வேர்மூலம் காணவேண்டுமென்றால் இந்த தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலியில் காணலாம். இதன் பயன் என்ன?

இன்று இருக்கும் பல மொழிகள், சொற்கள் எங்கிருந்து பிரிந்து வந்தன?

இந்தி, வங்காளி, பஞ்சாபி போன்ற மொழிகள் எங்கிருந்து உருவாயின?

இந்த மொழிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தன?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தன என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியும். சொற்களை காலத்தால் மீட்டுக் கொண்டுபோனால் இவையெல்லாம் ஒரே மூல மொழியில் இருந்து பிரிந்தன என்பது தெரிகிறது.

அந்த மூல மொழிக்கு தமிழ்மொழி மிகவும் நெருக்கமாக இருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் நம் முன்னோர்களின் வரலாறும் வெளிக் கொணரப்படுகிறது.

இதனால் ஒருவர் மற்றொரு மொழியிடம் பற்றுகொள்ளவும் அதைப் பேசுவோரிடம் உறவுகொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதில் நீங்கள் எதிர்கொண்ட சங்கடங்கள்? சவால்கள்?

பொதுவாக சில சொற்களைப் பற்றி ஆராயும்போது, அவை பிறமொழி அகராதிகளிலும் கிடைக்காது.

அவற்றுக்காக மலைவாழ் மக்கள் பேசும்மொழி, சிறு திராவிட மொழிகள், நாட்டுப்புற மொழி ஆகியவற்றை ஆராய வேண்டும். ராகி என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.

கேழ்வரகைக் குறிக்கும் இச்சொல் எங்கிருந்து வந்திருக்க வேண்டும்?

தமிழில் ‘ரா’ மொழியின் முதலில் வராது. இது படுகர்களின் மொழியில் உள்ளது. அவர்கள் இதை எரகி என்கிறார்கள். நான்கு இறகுகளாக கதிர் உடைவதால், அதற்கு இறகி என்று பெயர் வைத்திருக்கவேண்டும்.

அதுதான் ராகி ஆனது. சகோதரன் என்ற சொல் வடமொழியில் இருந்து நமக்கு வந்தது.

ஆனால் அது வருவதற்கு முன்னால் தமிழர்களுக்கு சகோதரனைக் குறிக்கும் சொல் இல்லையா?

தஞ்சாவூர் பகுதியில் சீர்காழியை அடுத்த ஊர்களில் வசிக்கும் மீனவர்கள் சகோதரர்களைக் குறிக்க வேறு சொல் கையாளுகிறார்கள். எனக்கு பிறவன்மார் மூணு பேர் என்பார்கள். பிறவிமார் மூணு பேர் என்பார்கள்.

பிறவன் என்பது ஆண் சகோதரனையும் பிறவி என்பது பெண் சகோதரியையும் குறிக்கிறது. தமிழில் உறை என்றால் தங்கியிருக்கும் வீடு.பிராகிருத மொழியில் உரா என்றால் வீடு.

பஞ்சாபியில் உரா என்றால் வீடு. எப்படி இச்சொல் அங்கே போனது?

ஸ்பெயினில் பாஸ்க் மொழியில் உரா என்றால் மனைவி.

வீட்டைக் குறிப்பது மனைவியைக் குறிக்குமல்லவா?

உறை என்று பேசுபவர்கள் யாரும் தமிழகத்தில் இல்லை. ஆனால் முன்னொரு காலத்தில் பிரிந்துபோனவர்களிடம் எஞ்சியிருக்கும் சொல்லாக அச்சொல் இருக்கலாம். இதுபோல ஏராளமான சொற்கள் உள்ளன.

இதையெல்லாம் இந்த அகரமுதலியில் தந்துள்ளோம். கல்வெட்டு ஆய்வுகள், அகழ்வாராய்ச்சி போன்றவை எப்படி உங்களுக்கு உதவி செய்துள்ளன?

நிறைய என்று சொல்லலாம். நான் சிந்துவெளி முத்திரைகள் அனைத்தையும் படித்துள்ளேன். ஐராவதம் மகாதேவனும் அஸ்கா பர்போலாவும் ஒரு முத்திரையைக் கூட படிக்க இயலவில்லை.

அவர்கள் முகமதியர்கள்போல வலமிருந்து அந்த முத்திரைகளைப் படிக்கவேண்டும் என்று முடிவெடுத்தனர். சிந்துவெளி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களில் 75 விழுக்காடு இந்தியாவில்தான் உள்ளன.

அப்படி இருப்பின் இந்திய மொழிகள் அனைத்தும் அரபியைப் போல வலமிருந்துதானே எழுதப்பட்டிருக்க வேண்டும்? அப்படியா உள்ளன? இடமிருந்துதானே எழுதுகிறோம்?

சிந்துவெளி முத்திரைகள் இடமிருந்துதான் எழுதப்பட்டவை என்று நான் ஐயாயிரம் முத்திரைகளைப் படித்துக் காட்டியுள்ளேன்.

ஆனால் நீங்கள் படித்தவற்றுக்கு அங்கீகாரம் இல்லையே? ஏன்?

வலமிருந்து படிக்கவேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். அதை மாற்றிக்கொள்ளத் தயாராக அவர்கள் இல்லை.

சரி. அப்படி முடிவெடுத்தவர்களை ஒரு முத்திரையையாவது அவர்களைப் படித்துக்காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம்.

லைக் என்று ஆங்கிலத்தில் இருக்கும் சொல்லை எகில் என்று வலமிருந்து படிக்கமுடியுமா?

முடியாது. அதுபோல்தான் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அஸ்கோ பர்போலாவாலும் ஐராவதம் மகாதேவனாலும் சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க இயலாது.

அப்புறம் இவர்கள் அதை அசை எழுத்து(syllabic) என்று சொல்லிவிட்டு படமாகப் (pictographic) படிக்கிறார்கள். ஒரு மீன் படம் இருக்கிறது. அதற்குப் பின்னால் ஆறு கோடுகள் இருக்கின்றன. இதை அறுமீன் என்று படிக்கிறார் கள்.

வணிகர்கள் பயன்படுத்திய முத்திரைகளில் அவர்கள் பெயர் தானே இருக்கவேண்டும்?

நான் படித்ததில் சாத்தன் என்றொரு பெயர் உள்ளது. பல பெயர்கள் தமிழ்ப்பெயர்களாக உள்ளன. கூத்தழகன் சாத்தன் என்றே வருகிறது. ‘ழ’கரமே நன்றாக உள்ளது.

சிந்துவெளி முத்திரைகளில் சிவனின் பெயர் கோ அவ்வன் என்று உள்ளது. யோக நிலையில் உள்ள சிவன். ஆரிய திராவிட நாகரிகங்களுக்கு இடையே ஒரு வேறுபாடு உண்டு.

யாகம் செய்தது ஆரிய நாகரிகம். யோகம் அதாவது தவம் செய்தது திராவிட நாகரிகம். இப்போது யோகத்தை அவர்களும் யாகத்தை இவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

சிந்துவெளி நாகரிகத்தில் யோக நிலையில் சிவன் இருப்பதால் அது தமிழர்கள் நாகரிகமாக இருக்கவேண்டும். சிந்துவெளியில் அந்த சிவன் மீது கோ அவ்வன் என்று உள்ளது.

கோ என்றால் மலை. மலையப்பன், கொண்டப்பன், கட்டப்பா என்கிறோம் அல்லவா?

சிந்துவெளி நாகரிகத் தமிழில் அவ்வன் என்றால் அப்பன்; அவ்வை என்றால் தாய் என்று நான் சொன்னேன். ஆனால் இலக்கியத்தில் எங்குமே இதற்குச் சான்று இல்லையே என மறுத்தார்கள்.

இலக்கியத்தைவிட 2000 மூவாயிரம் ஆண்டுகள் பழைமையானது சிந்துவெளி. அந்த சொல் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அந்தச் சொல் சங்ககாலம் வரை இருந்திருக்கிறது என்பது இப்போது புலப்படுகிறது.

புதுச்சேரி பல்கலைப் பேராசிரியர் ராஜன், புலிமான் கோம்பை என்ற ஓர் இடத்தில் செய்த ஆய்வில் ஒருநடு கல்லில் தமிழ் பிராமி எழுத்துக்களைப் படித்தார். அதில் அவ்வன் பதவன் என்று ஒரு பெயர் உள்ளது.

ஆக, சங்ககாலத்திலேயே அவ்வன் என்ற பெயர் இருந்திருக்கிறது. எனவே சிந்துவெளியில் நான் படித்ததும் சரியே என்ற முடிவுக்கு வந்தேன்.

மேலை நாட்டு மொழியியல் ஆய்வுக்கும் உங்கள் ஆய்வுக்கும் என்ன தொடர்பு?

அந்த கொள்கைகளை எப்படிப் பயன்படுத்திக்கொண்டீர்கள்?

அவர்கள் உலக மொழிகளுக்கு ஒரு பொது அளவுகோல் வைத்து ஆய்ந்தார்கள். ஆனால் வேர்மூலம் காண்பதில் தவறான பாதையில் சென்றுகொண்டுள்ளனர்.

சொற்களால் சொற்களை மீட்டமைக்கிறார்கள். ஆனால் அதற்குப் பொருள் இருக்கும் என்பதை அவர்கள் ஏற்பதில்லை.

காரணம் கருதித்தான் பொருட்களுக்குப் பெயர் வைத்துள்ளனர். எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்றார் தொல்காப்பியர். இந்த அடிப்படையில்தான் பாவாணர் அணுகுமுறையும் மேனாட்டவர் அணுகுமுறையும் வேறுபடுகின்றன.

சொல் மூலம் மட்டும் காட்டினால் போதும் என்கிறார்கள் அவர்கள். நாங்களோ சொல் மூலத்துடன் பொருள் மூலமும் காண்பிக்கிறோம். நிழல் என்பது பழங்காலத்தில் நீழல் என்று இருந்தது.

நீள்வதால் நீழல் என்று பெயர்வைத்தான் என்று நான் சொல்கிறேன். ஆனால் அதெல்லாம் வேண்டாம் நிழல் என்று பெயர்வைத்துவிட்டான் என்பதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்.

காரணம் வேண்டாம் என்பது மேலைநாட்டு அணுகுமுறை. உங்கள் மொழியில் தெரியவில்லை. நீங்கள் சொல்ல இயலாது. ஆனால் எங்கள் மொழியில் தெரிகிறது. நாங்கள் சொல்கிறோம்.

எங்களு டைய சொற்பிறப்பியல் அகராதி, உலகில் வந்துள்ள பிற சொற் பிறப்பியல் அகராதிகளைவிட வேறு பட்ட அமைப்பு கொண்டது.

மிகவும் விஞ்ஞானரீதியிலானது. சொல்லை ஆராயும்போது அதன் பொருளுக்கு முதலிடம் கொடுக்கிறோம்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல..