Wednesday 13 February 2013

பெரு நிலத்தை தமிழர்கள் தமது............!


இந்துக்களின் நாகரீகம் எனும் அடிப்படையில் , இன்று உலக ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும், தமிழர்களின் மூத்த குடி நாகரீகம் பற்றியது என்பதில் எந்த ஐயப்பாடுகளும் இல்லை.

இன்று இந்து நதி கரை வெளி நாகரீகம் ஏறக்குறைய கி மு 5000 ஆண்டுகள் பழமை வந்தவை என்பதை உலக மானிட இயல் வரலாற்று ஆசிரியர்கள் நிருபித்துள்ளார்கள்.

இன்று அப்கானிசுத்தான் பாகிசுத்தான் அமைந்துள்ள நிலபகுதிகளை தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களாக அக்காலத்தில் கொண்டிருந்தார்கள் என்பது நிறுபனமாகி உள்ளது.

இக்கால சம கால நிகழ்வாக கடல் கொண்ட வங்கம் இருந்துள்ளது . இந்நாகரீக வளமான வாழ்வு முறை இன்று பூம்புகார் கரை தொடக்கி ஆழக் கடலுள் அமிழ்ந்து உள்ளது என்பதும் நிறுபனமாகி உள்ளது.

எனவே இந்த இரு தொகுதி நாகரீகங்களை இணைத்து தமிழர்கள் இந்திய துணைக்கண்டம் என்று இன்று விளங்கும் பல நாடுகளை மாநிலங்களை உள்ளடக்கிய பெரு நிலத்தை தமிழர்கள் தமது ஒற்றை தாயகமாக வளமாக்கி வாழ்ந்துள்ளார்கள் என்பதை தர்க்க ரீதியாகவும் தடயங்கள் ரீதியாகவும் நாம் முன்வைக்க முடியும்.

இந்த நிலப்பகுதியில் தமிழர்கள் இன்று பத்து சத வீதத்துக்கும் குறைவான பகுதிகளை தமது வாழ்விடமாக கொண்டிருந்தாலும் அதனையும் இழக்கும் ஒரு அபாய சூழலில் வாழ்கின்றார்கள் என்பது உண்மை .

நாம் வாழும் காலப்பகுதியில் 1947 ஆண்டின் பின் தங்கள் தாய் நிலத்தில் பல பகுதிகள் இழந்துள்ளார்கள். ஈழத்தின் மொத்த நிலபரப்பாக1947 இக்கு முன் 25000 சதுர மைல்கள் இருந்தன.

அவை 1950 காலபகுதியில் படிப்படியாக சிங்களவரின் திட்டமிட்ட குடியேற்றங்கள் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கை காரணமாக தமிழரிடம் இருந்து பறிக்கப்பட்டு இன்று 7500 சதுர மைல்களாக குறுகி விட்டது . ஈழத்தமிழர்கள் தமது வளமான பூமிகளை பறி கொடுத்து ஏதிலிகளாக உலகெங்கும் அலையும் நிலையில் இருக்கின்றார்கள்.

1900 ஆண்டுகளின் பின் தமிழகம் ஏறக்குறைய 15000 சதுர நிலப்பரப்பை புதிய கேரளத்துக்கும் கிழக்கே நெல்லூர் தொடக்கி மேற்க்கே மங்களூர் வரையிலுமான 30000 சதுர மைல்களை ஆந்திராவுக்கும் கர்நாடகத்துக்கும் தாரை வார்த்து கொடுத்து விட்டு இன்று பரதேசியாக அவர்களிடம் நீர் பிச்சை கேட்டு நிற்கின்ற துர்பாக்கிய நிலை தோன்றி வளமான காடுகள் மலைகள் நதிகள் இல்லாம் பறிபோனது.

இது போதாது என்று, அண்மைய காலங்களில் கச்சதீவு திருப்பதி, பெங்களூர் முல்லை பெரியார் , கல்குகை என்று சகல பகுதிகளையும் கபளீகரம் செய்துவிட்டார்கள் தமிழரிடம் இருத்து. தன் தாய் மண்ணை இழந்து இழந்து இன்று ஒரு மூளைக்குள் முடங்கி கிடக்கின்றது தமிழினம்,

கி முன் தமிழன் உலகில் மிக பெரிய நாகரீகத்தின் வாரிசாக அகண்ட குமரி மண்டாலம், கடல் கொண்ட வங்கம் கலிங்கம், சங்கம் , என்று வாழ்ந்த தன் நிலங்களை இயற்க்கை அழிவிடம் பறி கொடுத்து.

கடல் கொண்ட பின்னும் கூட கி பி 100 களில் ஏறக்குறைய இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் சதுர மைல்களை சொந்தமாக வைத்திருந்து வந்தவரை எல்லாம் வரவேற்று இந்த பூமி எல்லோருக்கும் பொது என்று நன் நெறி சொன்ன ஒளவை வள்ளுவன் காலத்தில் தன் நிலங்களை கொடுத்து இன்னமும் கொடுத்து இன்று இழந்து கையறு நிலையல் கரைந்து, தன் நிலத்தை இழந்து கரைந்து கொண்டு இருக்கின்றது தமிழன் இருப்பு.

தமிழகம் இன்று 50200 சதுர மைல்களுக்குள் சுருங்கி உள்ளது . ஈழம் இன்று 7500 சதுர மைலக்ளாகி உலகில் தமிழன் தனக்கென வாழும் நிலம் குறுகி பெரும் அபாய சூழலில் உள்ளது.

தமிழன் இன்று வாழும் பகுதியும் இன்னும் சில காலங்களை இல்லாது போய் தமிழன் என்ற இனமே அழிந்து வரலாற்றில் அழிந்து போன இனம் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவான்.

உலகில் வாழும் இனங்களுக்கெல்லாம் மூத்த குடி தமிழ்குடி , இந்த மகிமை தமிழனுக்கு மட்டுமே உரியது, இத்தனை வரலாற்று சிறப்பு உலகில் இன்று வாழும் எந்த இனத்துக்கும் இல்லை. எமது மூதாதையர் இந்த பெருமையை மிகுந்த இன்னலுக்குள் பாதுகாத்து தந்துள்ளார்கள் , இன்று வரை உறக்கத்தில் இருந்த வேங்கையின் வாரிசே.

இன்று நீ விழித்து எழுந்து பார்த்தாலே போதும் . உன்ன பார்வை ஒன்றுதான் வேண்டும் . உன் பெருமை உனக்கே உரியது . இயற்கையாக நீ தமிழனாக இத்தைய பெருமையுடன் பிறந்து விட்டாய். பல் ஆய்வாளர்கள் தாங்கள் தமிழர்களின் வாரிசுகள் என்றும் தமிழனாக பிறப்பதே பெருமை என்று சொல்லும் அளவில் இன்று உலகம் வியக்கின்றது.

உன் பெருமைகளை இந்த உலகு அறிந்த அளவில் நீ அறியாமல் இருப்பது தவறு. தமிழா இந்த உலகு உள்ளவரையும் இந்த உரிமையை நீ விட்டுக்கொடுத்து வாழலாமா?.

இடையில் வந்த ஏனைய இனங்களைப்போல நாடு காத்து , எம் மூத்த தமிழ் காத்து வாழவேண்டும் . உலகில் தமிழன் என்றும் அழியாது வாழும் நிலை உன்கையில்தான் இன்று உள்ளது.

எதோ ஒரு மனிதனாக வாழ்வது பெருமை அல்ல. உன் பாரம்பரிய வரலாற்றை இழப்பது நியாயமல்ல. அதை உன்ன வருங்கால சந்ததிக்கும் எடுத்துசெல்ல எழுந்து வா வேங்கையின் வாரிசே.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.

Monday 11 February 2013

சிங்களத்தின் இரகசியத் திட்டங்கள்

சிங்களத்தின் இரகசியத் திட்டங்கள் அம்பலம்: அதிர்ச்சித் தகவல் வெளியானது !

 இனி இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள், அம்மாவை அம்மே என்று தான் கூப்பிடவேண்டிய நிலை தோன்றவுள்ளது. இது உண்மை தான் ஆச்சரியப்படவேண்டாம் தமிழர்களே ! கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அரசானது ஒரு இரகசிய சுற்றறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. இதன் அடிப்படையில் 89 தமிழ் நகரங்களுக்கு சிங்களப் பெயரைச் சூட்ட இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது.

வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கொட்டை : பட்டகொட்ட என்றும்...... பருத்தித்துறையை பேதுருதொடுவ என்றும்..... நைனா தீவு நாகதீப என்றும்..... கிளிநொச்சி கரணிக என்றும் ...... முல்லைத்தீவு மோலடோவா என்றும் மாற்றப்படவுள்ளது தற்போது ஆதாரங்களோடு அம்பலமாகியுள்ளது. சுமார் 89 தமிழ் நகரங்கள் படிப்படியாக மாற்றம் பெறவுள்ளது என்றால் நினைத்துப் பார்க்க முடியுமா ? இனி தமிழர்கள் இலங்கையில் வாழத் தான் முடியுமா ? 

ஈழத் தமிழர்களுக்கு ஒரு பாரிய அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதனை எத்தனை தமிழர்கள் உணர்கிறார்கள் ? என்று தெரியவில்லை. ஆனால் தற்போது நடைபெறவுள்ள விடையமானது இலங்கையில் விடுதலைப் புலிகள் வெல்லப்பட்டதை விட மிகவும் அபாயகரமான ஒரு செயலாகக் கருதப்படுகிறது !

ஆனால் இதுவரை தமிழகத் தலைவர்கள் செய்யாத ஒரு விடையத்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் செய்துள்ளார். வெளியாகியுள்ள இந்த அறிக்கையை அப்படியே மொழிபெயர்த்து இலங்கை அரசின் திட்டத்தை ஒரு கடிதமாக எழுதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்க்கு அனுப்பியுள்ளார். 


இலங்கையில் உள்ள தமிழர் நகரங்கள் சிங்களமயமாக்கப்படவுள்ளதை அவர் தெள்ளத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார். இதுவரை இலங்கை அரசுக்கு மத்திய அரசு செய்த உதவிகள் போக, இனியாவது மிஞ்சியுள்ள தமிழர்களுக்கு உதவுங்கள் என்று அவர் பிரதமருக்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். பாரம்பரியமாக வாழும் ஈழத் தமிழர்கள் இலங்கைத் தீவில் அனாதைகள் ஆக்கபடும் நிலை வந்துகொண்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள 89 தமிழ் நகரங்கள் எவ்வாறு மாற்றப்படவுள்ளது என்பதனை தமிழ் மக்களாகிய நீங்களும் ஒரு முறை பாருங்கள் ! இனி உங்கள் சொந்த ஊர்களை நீங்கள் பாவிக்க முடியாத நிலை தோன்றும் ! உங்கள் பிள்ளைகளுக்கு , இப்படி ஒரு ஊர் இருந்தது என்று தான் இனி நீங்கள் கூறவேண்டி இருக்கும். பிறந்த ஊர் ... பிறந்த நாடு ... பிறந்த மண் எல்லாவற்றையும் தொலைத்த ஒரே இனம் எம் தமிழ் இனமாகத் தான் இருக்கும் !


என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை... ? இவை அனைத்தும் இலகுவாக நடக்க சிங்கள அரசுக்கு துணை நிற்ப்பதும் சில தமிழர்கள் தான் ! இவர்களின் நண்பர்களே புலம்பெயர் நாடுகளில், மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள். இதனால் புலம்பெயர் தமிழ் சமூகம் வேறு திசையில் செல்கிறது. இதேவேளை இந்த இடைவெளியைப் பயன்படுதி, சிங்களம் தாம் நினைத்ததை சாதித்து முடிக்கிறது. எனவே இத் தருணத்திலாவது நாம் ஒன்றுபடவேண்டியது எவ்வளவு அவசியம் என்பதனை உணருங்கள்.

இனியும் ஒன்றுபடாவிட்டால், சொந்த ஊரைத் தொலைத்த ஈழத் தமிழினமாக நாம் அலைய நேரிடும். மானங்கெட்ட தமிழனுக்கு இதுதேவையா என்று வேற்றின மக்கள் எம்மீது காறித்துப்பும் நிலை தான் மிஞ்சும் !

பின் குறிப்பு: இதில் பல நகரங்கள் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது. தமிழர்களால் குடும்பி மலை என்று அழைக்கப்படும் இடம் தற்போது தொப்பிக்கல என்று மாற்றம் பெற்றுள்ளது. மற்றும் சில தமிழ் ஊடகங்களும் இச் சிங்களப் பெயரையே பாவிக்கின்றது. அதுமட்டுமல்லாது பல கோவில்களின் பெயர்களும் மாற்றப்படவுள்ளது என்பதும் அதிர்ச்சியான தகவல் தான் !

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.










Wednesday 6 February 2013

தென் கிழக்காசியாவில் .....!

தென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்!


வனவாசகம் என்ற ஒரு நாடு உண்டு. அதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

தமிழர்கள் மலைநாடு என்று அன்போடு அழைக்கப்படும் மலேசியா நாட்டின் தொடர்பு வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டது என்றும். அறியபட்ட சரித்திர குறிப்புக்களின் வழி இந்தியர்களின் தொடர்பு 5000 ஆண்டுகள் முற்பட்டது எனவும், இராமாயாண மகாபாரதம் நடைப்பெற்ற காலத்தில் தென் கிழக்கு ஆசியா, (ஜா)வா, மலாயா ஆகியவை இந்தியாவோடு இனைந்த பகுதி என்று அறிகிறோம்.

தமிழர் தம் பண்பாட்டில் மதம் இயற்கையாக இடம் பெற்றுள்ளது. நாகரித்தின் தொடக்க காலங்களில் மானுடச் சமூகத்தின் வளர்ச்சியில் மதம் ஆற்றல் மிக்க பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறது. உண்மையில் தென்கிழக்கு ஆசிய மக்கள் முதலில் இந்து சமயத்தைத்தான் தழுவினர். அதனால்தான் அவர்களின் பழக்கவழக்கங்களிலும் பண்பாடுகளிலும் மொழிகளிலும் இந்து சமயத்தின் தாக்கம் இன்றும் உணரப்பட்டு வருகிறது

பாரதம் நடைப்பெற்றக் காலத்தில் மலேசியாவுக்கு “பார்த்தன் திக்கு” விஜயம் செய்துள்ளார். பாண்டவர்களின் சிறந்த பார்த்தன் திக்கு யெளவன தீபத்தையும் (ஜாவா) சு(ஸ்)வர்ண தீபத்தையும் (மலேசியா) கண்டு வெற்றிக் கொடி நாட்டியதாய் பாரதம் கூறுகிறது.

பாண்டவர் தலைவர் தருமபுத்திரர் இராச(ஜ) சூய யாகமொன்றை இந்திரப்பிரச(ஸ்)தத்தில் ( இந்தியா) நடத்தினார். இந்த வைபவத்திற்கு பல நாட்டின் மன்னருக்கு அழைப்புக்கள் கிடைத்தன. அன்றைய மலேசியா மன்னர்களும் கலந்து கொண்டனர். சகாதேவன் அன்றைய மலேசியாவின் பகுதிகளுக்கு கண்காணிப்பாளனாக இருந்து அடிக்கடி வங்க வாயிலாக வந்து சென்றுள்ளார். பாண்டவர்கள் யாவாத்தீவில் ஒரு காலத்தில் நாட்டாண்மைக் கொண்டார்கள் என வியாச முனிவர் குறிப்பிட்டுள்ளார்.

கி.மு 274-232 அசோக சக்கரவத்தி பவுத்த சமயப் போதகர்களை பொன்னாடு என்று போற்றப்பட்ட சுவர்ண பூமிக்கு அனுப்பி வைத்தார். சு(ஸ்)வர்ணம் என்றால் தங்கம் என்று பொருள். அந்த காலத்தில் மலேசியாவில் தங்கம் அதிகம் கிடைத்த காரணத்தால் பொன்னாடு என்று அழைக்கப்பட்டன. கி.மு 200ல் மலேசியாவை “இந்திர பாரத பூரா” என்று அழைக்கப்பட்டது. இந்திர என்றால் தங்கம் ,பாரத் என்றால் நாடாகும்

தமிழ் இலக்கியங்களில் கடாரம் என்று கூறப்படும் பழமைமிக்க ஒரு நாடு மலேசியாவில் இன்று கெடா என்று அழைக்கப்படும் மாநிலம் ஆகும்.கடா அல்லது கயிடா என்பது யானைகளை கன்னி வைத்து பிடிக்கும் இடம் என்று கூறப்படுகிறது. ஆனால் கெடா என்ற வார்த்தை அந்த அர்த்தத்தில் உருவான ஒரு பொருளாக இருக்காது என்பது சிலரின் வாதம்.

பழந்தமிழ் கல்வெட்டுக்கள் கெடாவை கடாரம் அல்லது கழகம் என்று கூறுகின்றது. கடாரம் என்பதின் பொருள் என்னவென்றால் அகன்ற பாணை அல்லது கருமை நிறம் என்று சில சரித்திர ஆராச்சியாளார்கள் கூறுவதுண்டு. அரபியரும் பார்சிகாரர்களும் வட மலேசிய தீபகற்பத்தை கிலா, கலா அல்லது குவலா என்று அழைத்ததுண்டு.

3000 ஆண்டுக்குமுன், இந்திய வேந்தர்கள் கடல் கடந்து கடாரம் வந்த பொழுது அங்கே தவளைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனவாம் அதனால் தான் கடாரத்தை “காத்தா” என்று அழைத்தனர். காத்தா என்றால் மலாய் மொழியில் தவளை என்று பொருள். மலாய்க் காரர்களின் வாய் மொழி கதைகளில் சொல்லப்படும் சில காதல் புனைவு கதைகளிலும் வரலாற்று தகவல்ளிலும் லங்காசுக என்ற ஒரு பண்டைய அரசாங்கம் கெடாவில் இருந்ததகவும் அதன் பண்டைய எச்சங்கள் இன்னும் இருபதாகவும் கூறுகின்றனார்.

பண்டைய இந்திய நாட்டு வியபாரிகள் கெடாவை காத்தாரை என்று அழைத்தாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். கடாரம் அல்லது கெடா அன்றைய இந்திய வியபாரிகளுக்கு மலை நாட்டின் அடையாள மார்க்கமாகவும் இளைப்பாறி தனது கடற்பயணத்தை கிழக்கு ஆசியாவுக்கு தொடரும் தளமாகவும் விளங்கி உள்ளது. ஆறாம் நூற்றாண்டில் லங்காசுக என்ற அரசாங்கதின் மைய இடமாகவும் லெம்ப பூஜாங் என்று சொல்லபடுகின்ற பழைய வரலாற்று சின்னம் இந்தியர்களின் கலச்சார படை எடுப்புக்கும் நாகரிக அடையாள சின்னமாக திகழ்கிறது.

தமிழர்கள் கி.பி முதல் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தலைச்சிறந்த மாலுமிகளாகவும் படைவீரர்களாகவும் வர்த்தகர்களாகவும் திகழ்ந்தார்கள். வர்த்தக சம்மந்தமாக இந்திய தமிழ் மாலுமிகள் கடல் கடந்து மலேசியாவுக்கு வந்தவர்கள், நாளாடைவில் இங்கு குடியிருபுக்களையும் அரச அமைப்பையும் எற்படுத்தி சமயம் கலைக் விவசாயம் பண்பாட்டுக் கூறுகளையும் எழுப்பி இருக்கின்றார்கள். காடுகளிலும் குகைகளில் வாழ்ந்த சுதேசிகளுக்கு விவசாயத்தையும் நாகரீகத்தையும் கற்றுக்கொடுத்திருக்கின்றார்கள் நம் தமிழர்கள்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.