Wednesday 21 November 2012

கடலை வேலியாக கொண்ட தமிழர்கள்....!

உலகமெங்கும் கடலை வேலியாக கொண்ட தமிழர்கள் கடலில் பயணம் செய்த காலம்.



என் ஆய்வின் மூலம் கற்காலம் முடிவதற்கு முன்பே துவங்கி விட்டனர் என்பதற்கு பல தரவுகள் கிடைத்து வருகின்றன.

குறிப்பாக தமிழர்களின் கடல் பயணங்கள் அதில் பயணம் செய்த குறிஞ்சிக்கும் நெய்தலுக்கும் நடுவில் வாழ்ந்த மருத நிலத்தை சேர்ந்த மக்கள் என்பதற்கு நிலத்தின்அமைப்பை, மக்களின் வாழ்வியலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட தமிழ் சொற்களின் அடையாளங்களை பல உலக கடற்கரை நாகரிக மக்கள் வாழுகின்ற இடங்கள் அவர்கள் பெயர்களை வைத்து என்னால் நன்கு உணர முடிகின்றது.

அரசர்களின் வாழ்கையை பற்றி அதிகம் படித்த மக்களுக்கு ,தமிழர்கள் இன்று மட்டும் உலகமெங்கும் வாழவில்லை, பல காலம் காலமாய் அவர்கள் உலகமெங்கும் சென்று இருக்கிறார்கள் என்று புரிய வைக்க தகுந்த தரவுகளுடன் முயன்று வருகின்றேன்.

தமிழர்களின் கடல் பயணங்களை முழுமையாக தொகுக்க முயன்று வருகின்றேன்.  தேவகோட்டை நாகப்பா செட்டியார் அவர்களிடம் இருந்து வாங்கிய அன்னபூரநீ கப்பலை, அதன் அமெரிக்க கடல் பயணத்தை பற்றி தரவுகள் கிடைத்த படி இருக்கின்றன. 

க(ஹ)பிப் அரசர் ,வள்ளல் சீதக்காதி பர்மா முத்து பிள்ளையின் கப்பல்களை பற்றியும் தரவுகள் வந்த படி உள்ளது.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.