Thursday 1 August 2013

எதற்காகவும் விடுதலைப் போராட்டம் நிற்காது........!

72 மணி நேர இடைவெளியில் சிறிலங்காவை அழிக்கும் வல்லமையில் இன்றும் புலிகள்!

"விடுதலைப் போராட்டம் முடிந்து விட்டது" என்று கேணல் ராம் கூறியதாக இணையங்களில் செய்தி கிடக்கிறது. இதே ராம்தான் மே 18 ற்கு பிறகு “காடுகளுக்குள் இருந்து பயிற்சி எடுக்கிறோம், விரைவில் போராடுவோம்” என்றும் கூறினார். 


அவர் அற்புதமான ஒரு போராளி. கேபியின் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு இன்று சிங்கள சித்திரவதை முகாமிலிருந்து சிங்களத்தின் தேவைக்கேற்ப பேச வேண்டிய சூழல்.. அவரை நாம் விடுவோம். அவர் இப்பதானே வெளியே வந்திருக்கிறார். பின்பு இது குறித்து எல்லாம் ஆறுதலாக பார்ப்போம்.

ஆனால் அவர் சொல்லும் இந்த கூற்றை மட்டும் இப்போது அலசுவோம். இலக்கை அடையாமல் எந்த மக்கள் போராட்டமும் முடிவுக்கு வராது. மே 18 ற்கு பிறகு தமிழ் மக்களுக்கு நாடு தேவையில்லை. சுயநிர்ணய உரிமை தேவையில்லை. அதிகாரப்பகிர்வு கூட தேவையில்லை. அவர்களை அவர்கள் நிலத்தில் விட்டாலே போதும்.

ஏனென்றால் பசிக்கு கஞ்சி குடிக்கோணும். அதற்கு அவர்கள் வாழ்வியலும் தொழில் முயற்சிகளும் இணைந்த நிலம் அவர்களுக்கு வேண்டும். அது போதும். எல்லாவற்றையும் நிறுத்தி விடலாம். ஆனால் என்ன நடந்தது? என்ன நடக்குது?

கேணல் ராம் சொல்ல வருவது – சிங்களத்திற்காக அவர் தமிழர்களுக்கு சொல்ல விரும்புவது ஆயுதப் பேராட்டத்தை இனி முன்னெடுக்க முடியாது என்ற ஒரு அர்த்தத்தில்தான். ஆனால் அதில் பாதிதான் உண்மை. அதாவது இனி சிங்களத்தை நாம் முன்பு போன்று ஒரு மரபுவழி இராணுவமாக எதிர்கொள்ள முடியாது. அது உண்மைதான்.
ஆயுத போராட்டத்திலுள்ள பாவ புண்ணியங்களை தள்ளிவைத்து விட்டு புலிகளின் பின்னடவை உலக இராணுவ வல்லுனர்கள் அலசியிருக்கிறார்கள். அவர்கள் புலிகள் விட்ட தவறாக குறிப்பிடுவது, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அரசியல் தவறையும் அடுத்து மரபுவழி இராணுவமாக உருவாகியதையும்..

மேற்குலக இராணுவ வல்லுனர்களின் கருத்தியல் மனித வளத்தைவிட நவீன படைத்தளபாட பயன்பாடுதான் படைவலுச் சமநிலையை பேணும் முக்கிய காரணி என்பதாக இருக்கிறது. அதாவது தொழில் நுட்ப ரீதியில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் வளர்ச்சியடையாமல் ஒரு அங்கீகரிக்கப்படாத இராணுவம் மரபுவழியாக தொடர்ந்து இயங்க முடியாது என்பது அவர்கள் வாதம்.

அதாவது அரசுக்கு ஒரு அங்கீகாரத்துடன் தொடர்ச்சியான ஒரு ஆயுத தளபாட வழங்கல் – நவீன தொழில் நுட்ப வழங்கல்கள் ( பல்குழல் எறிகணைகள், கிபிர் யுத்த விமானங்கள் குறிப்பாக செய்மதி உதவி) இருக்கும். சட்ட விரோதமாக இயங்கும் ஒரு அமைப்புக்கு அது சாத்தியமில்லை. மனித வளத்தை மட்டும் நம்பி போராட முடியாது.

மனித வளத்திலும் நிலப்பரப்பிலும் கூட சிங்கள இராணுவ வலு அதிகம். மன ஓர்மத்திலும் போராட்ட தந்திரங்களிலுமே நாம் உயர்ந்து நின்றோம். கருணா, கேபி என்ற இரு துருவ துரோகங்களின் விளைவே எமது மன ஓர்மத்திலும் போராட்ட தந்திரங்களிலும் பாதிப்பை செலுத்தி நாம் வீழ நேர்ந்தது என்ற இராணுவ உண்மையை இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம்.

ஆனாலும் புலிகள் அதையும் மீறி போராடியதை ஒரு நம்ப முடியாத அதிசயமாகவே உலக இராணுவ வல்லுனர்கள் பதிவு செய்கிறார்கள். ஒப்பீட்டளவில் குறைவான நிலப்பரப்பையும் குறைந்தளவிலான போராளிகளையும் வைத்து கொண்டு ஒரு சிறந்த மரபுவழி இராணுவமாக புலிகள் இயங்கியது ஒரு இராணுவ அதிசயமாகவே அவர்கள் பதிவு செய்கிறார்கள்.

அவர்கள் குறிப்பிடும் முக்கியமான பகுதி இதுதான். புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்தவுடன் புலிகள் கெரில்லா போராட்ட முறைகளை வகுத்து அணிகளை பரப்பியிருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதமாக இருக்கிறது. உலகின் தலைசிறந்த கெரில்லா இரணுவம் என்பதுடன் தற்கொலைத் தாக்குதல்களின் அதியுச்ச பயனை சாத்தியப்படுத்திய ஒரு அமைப்பு என்ற அடிப்படையில் அவர்கள் இதை முன்வைக்கிறார்கள்.

இனி நாம் விடயத்திற்கு வருவோம். தற்போது கேணல் ராம் மட்டுமல்ல பலர் சொல்லும் மரபுவழி இராணுவ கட்டமைப்பையே நாம் இழந்திருக்கிறோம். ஏனென்றால் எமக்கு ஆளணியும் இல்லை தொழில்நுட்ப வழங்கலும் இல்லை. நிலப்பரப்பும் இல்லை.

ஆனால் உலகின் தலைசிறந்த கெரில்லா போராட்ட அமைப்பு என்பதுடன் பயிற்சி -துணிவு -தந்திரம் மிக்க தற்கொலைப் படையணி என்ற கட்டமைப்பை நாம் இன்னும் இழக்கவில்லை. அது செயற்பாட்டில் இல்லையே ஒழிய உறங்கு நிலையில் அப்படியே இருக்கிறது. அல்லது அதை எம்மால் வளர்க்க முடியும். கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்து புலிகள் வெளியிலிருந்து சாத்தியமான பலவற்றை அலசிக்கொண்டிருக்கிறார்கள்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாதிடப்பட வேண்டிய இக்கட்டுக்குள் தள்ளியதும் படைவலுச் சமநிலையை புலிகள் பக்கம் திருப்பியதுமான ஒரு தாக்குதல்தான் கட்டுநாயக்கா விமான நிலைய தாக்குதல். வெறும் 14 போராளிகள் அதை சாதித்து காட்டினார்கள்.

உண்மையில் ஆயுத போராட்டத்திற்கான தேவை தற்போது இல்லை. தேவைப்பட்டால் சில நூறு போராளிகளுடன் 48 – 72 மணிநேர இடைவெளிகளில் ஸ்ரீலங்காவின் இராணுவ பொருண்மிய கேந்திர நிலைகளை தாக்கி அழித்து முடக்க செய்யலாம். அதற்கு தேவை பல்லாயிரக்கணக்கான போராளிகள் அல்ல. கட்டுநாயக்காவிற்குள் அநுரதபுரத்திற்குள் புகுந்த போராளிகளை போன்ற 100 போராளிகள்தான்.

இந்த பத்தியினூடாக ஆயுதப் போராட்டத்திற்கு வரைவிலக்கணம் எழுதவில்லை. ஒரு ஆயுதப்போராட்டத்தின் தோல்லி அந்த இனத்தின் அரசியல் தோல்வி அல்ல என்பதை பதிவு செய்வதுதான் முதன்மை நோக்கம். ஆயுத வழியில் கூட போராடும் வல்லமையை நாம் இழந்து விடவில்லை என்ற யதார்த்தத்தையும் எதிரிகளுக்கு புரிய வைப்பதற்கு முன்பாக நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் இந்த பதிவுக்கு காரணம்.

மாறிவரும் பிராந்திய – பூகோள அரசியலின் பிரகாரம் நாம் “சர்வதேச உறவுகள்” என்ற இராஜதந்திர பதத்தை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறோம். எனவே தாயகம் -புலம்- தமிழகம் என்ற இணைந்த கூட்டு சக்தியாக உருவெடுத்து பேரம் பேசும் வல்லமையை வளர்த்து எமக்கான நீதியை அற வழியில் பெற நிறையவே வாய்ப்பிருக்கிறது. எனவே ஆயுதப் போராட்டம் தற்போது எமக்கு தேவையில்லை.

தேவைப்பட்டால் ஒரு பின் தள ( இது முழுமையான உதாரணம் இல்லாவிட்டாலும் ஒரு புரிதலுக்கு லிபிய புரட்சியை எடுத்து கொள்ளலாம்) உதவியுடன் ஒரு இராணுவ புரட்சியை எம்மால் செய்யவும் முடியும். கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து நாம் அதை சாதிக்க கூடிய உரையாடல்களிலேயே இன்னும் இருக்கிறோம்.

இன்று இலங்கைத்தீவை பொருத்தவரை பல ஆருடங்கள் முன்வைக்கப்படுகின்றன.

01. சிங்கள மக்கள் மகிந்தவின் குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒரு புரட்சி செய்ய வாய்ப்பிருக்கிறது.

02. ஜேவிபி அல்லது சிங்கள மாணவர்கள் அல்லது இடதுசாரிகளின் அல்லது இவை மூன்றும் இணைந்த புரட்சி நிகழ்வும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

03. ஒரு இராணுவப்புரட்சி சிங்கள இராணுவத்தால் கொண்டுவரப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. மே 18 இற்கு பிறகு மேற்குலக சக்திகளின் துணையுடன் சரத்பொன்சேகா அதில் ஈடுபட இருந்தபோதே கைது செய்யப்பட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

04. இஸ்லாமியர்களுக்கு எதிராக சிங்கள பாசிசம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் சூழலில் அது ஒரு பெரிய போராட்டமாக உருவெடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

05. இந்தியா – சீனா – அமெரிக்கா என்று பகை முரண் நாடுகளின் உதவியை பெற்று எம்மை தோற்கடித்ததால் பிராந்திய நெருக்கடியை சிங்களம் சந்தித்திருக்கிறது. இது எமக்கு சாதகமான ஒரு நிலையாக மாற்றம் பெற்றிருக்கிறது.

06. இதை விட மனித உரிமை அமைப்புக்களின் நெருக்கடியால் தடுமாறுகிறது சிங்களம். போர்க்குற்ற விசாரணை, இனப்படுகொலை விசாரணை என்று சிங்களத்தை சுற்றி வலைகள் பின்னப்பட்டு கொண்டே இருக்கின்றன.

இப்படி இன்னும் வெளியில் பதிவு செய்ய முடியாத இராஜதந்திர நெருக்கடிகள் சிங்களத்தை சுற்றி சுழன்று கொண்டிருக்கின்றன.

எனவே இவற்றை எல்லாம் தமிழர்தரப்பு கவனமாக உள்வாங்கி ஒரு தமிழர் சார் அரசியலை செய்யும் வல்லமையை பெற்று விட்டது. வெளித்தோற்றத்திற்கு நாம் உள்ளுக்குள்ளே முரண்படுவது போல் தோன்றினாலும் இறுதி நோக்கத்தில் தெளிவாகவே இருக்கிறோம்.

எமது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சிங்கள மக்களுடனோ, சிங்கள மாணவர்களுடனோ, சிங்கள கட்சிகளுடனோ இணைந்து புரட்சியில் குதிக்க நாமும் தயாராகவே இருக்கிறோம்.

எனவே யாருக்காகவும் எதற்காகவும் விடுதலைப் போராட்டம் நிற்காது. அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.