Tuesday 13 August 2013

தமிழர்கள் யார்.............?

இதுதான் முதலில் அதிகம் பார்க்கபடவேண்டியது .பல குழுக்கள் தமிழை பேசினர். ஆனால் அவை கொஞ்சம் கொஞ்சம் வேறுப்பட்டே இருந்தன. அப்புறம் அவர்களின் எழுத்துவடிவங்கள் வெவ்வேறானவை.

பல்லவ வட்டெழுத்து முறையில் இருந்தே தன் வரி வடிவத்தை தாய் ( தாய்லாந்தின் ) மொழி எடுத்துக்கொண்டது.


மூர்கள் என்று சொல்லப்படும் மொரக்காவை சார்ந்தவர்கள். ஐரோப்பியர்கள்; கிரேக்கர்கள்; எகிப்தியர்கள் என பல வர்தககுளுக்கள் அவர்களின் மொழிபயன்பட்டை அதிகபடுத்தியவை.

தமிழர்கள் இது போன்றே இருந்து வந்து உள்ளனர். இப்ன் பட்டுடா என்கிற அரேபியாவின் வழிப்போக்கன் கேரளம் வந்தது இன்னும் வரலாற்றில் உண்டு. ஆனால் பட்டுடவின் மரக்கலம் உடைந்த தருணத்தில் அவனுக்கு மன்னன் உதவில்லை என்றும் உதவினார் என்றும் பதிவு செய்யபடுகிறது.

தமிழர்களின் வணிக பொருள் திரவியங்கள். அதில் மிளகும் அடக்கம். மிளகு தமிழ் மண்ணில் மட்டுமே ( கேரளமும் ) விளைந்ததாக பதிய படுகிறது.

ஏசுவின் பிறப்பின் தருணத்தில் ஏசுவை காண வந்தது திரவிய வர்தர்கர்கள் - கிழக்கில் இருந்து வந்தவர்கள் - என்று நம்பபடுகிறது. இது உண்மையாக இருந்தால் - அவர்கள் தமிழர்கள் ஆக இருக்கலாம்.

சுமேரியர்களுடன் தமிழர்கள் தென் அமெரிக்காவில் கலந்துகொண்டனர் என்று சொல்லப்படுகிறது. மேக்சிகோவில் உள்ளவர்கள் அந்த மண்ணின் மனிதர்களைத்தான் திருமணம் செய்து கொண்டனராம். இது அங்கே விதி போல் கடைபிடிக்கபட்டிருக்கலாம். வெள்ளையர்கள் வந்த தருணத்திலும் இந்த நிலை என்று ஒரு முறை அறிந்துகொண்டேன்.

முதல் நாடுகள் (First Nations) என்று ஒரு குழு கனடா மண்ணில் உண்டு - இவர்கள் பூர்விகர்களுக்கு பின்னால் வந்திருக்கலாம் - இவர்கள் வணிக குழுவாக இருக்கலாம். எனக்கு இது தொடர்பாக முழுமையாக தெரியவில்லை.

மேக்சிகோவின் பல நகர் பெயர்கள் தமிழ் பெயர்களின் திரிபே என்று சில ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். மலையூர் என்கிற ஊரின் பெயரே மலேசியா என்கிறது ஆங்கிலர்களின் ஆய்வு.

ஆக வெள்ளையர்களின் வரவிற்கு முந்தய வரலாற்றில் தமிழர்கள் என்று எந்த நிலையிலும் தமிழர்கள் அறியப்படவில்லை அவர்களின் குழு பெயரிலே அறியப்பட்டனர். மாயன்கள் - அபோர்கின்கள் - ஈழர்கள் - வேட்டுவர்கள் - நாகர்கள் - யட்சர்கள் ( இந்த பெயர் பற்றி ஆய்வு செய்வது நலம் ) என்று நிறைய குழுக்களாகவே தமிழன் அறியப்பட்டான்.

தமிழனாய் அல்ல. இன்றும் தமிழர்களை குழு பெயர் சொல்லி குறிக்கும் வழக்கம் மலையாள பூமியில் உண்டு. பாண்டிகள் நாம் சேரர்களுக்கு.

வழக்கம் போல் பிரித்தானியா ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் BBC (British Broadcasting Corporation) வாயிலாக தமிழர்களுக்கு உரிமை கொண்டாடக் கூடிய நிலப்பரப்பு தமிழர்களின் ஆள்மைக்குள் இருக்கவில்லை எனச்சொல்லுவதாகவே இந்த ஆய்வு தமிழர்கள்மீதும், தமிழர்கள் வரலாற்றின் மீதும் திணிக்க்கப்பாடுவதாகவே எண்ணத்தோன்றுகின்றது. 

தமிழ்மக்களே எங்களுக்கு என சொந்த நாடு இல்லாத காரணத்தால் உலகமும், தமிழர்களை அழிக்க நினைக்கும் இனங்களும் தங்களது அரசு, தமது கட்டுப்பாட்டினுள் இருக்கும் ஊடகங்கள் ஊடாகவும் தமிழர்களின் வரலாற்றையும் தமிழ்மக்கள் சார்பான அனைத்து செயற்பாடுகளையும் ஒடுக்குவது, அழிப்பதே நோக்கமாகும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக.........
 உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
 நன்றிகள் பல.