
சிதைக்கப்படும் என்று தெரிந்தும்
கனவில் தினம் தினம் ஒரு மாளிகை
கட்டி முடிக்கிறது மனம்.
கண்கள் மூடிய உறக்கத்திலும்
காட்சிப்பிழைகள்.
கருவில் சுமப்பது வெறும் கல்
என்பது தெரியாமல்
கற்பனை திரை எதற்கு ?
அழும் மேகம் அறியுமா ?,,
விரிசல் விழுந்து வீனைய்ப் போன
கரிசல் காட்டு பூமியை மட்டுமே சிலிர்க்க
வைக்கும் சத்தியம் ?
தூரத்தில் தூறல் என்று
நாவரண்டு ஓடுகிறாய்
அந்த கானல் நீருக்காக !
விதை விருட்சமாக அது காலக் கணிதத்திடம்
பதில் சொல்லியே ஆகா வேண்டும்,
ஆனால் காத்திருக்காத நீரோடைகள் சங்கமித்து
காட்டாறாக மாறி காலத்திற்கு கட்டளையிடலாம் !

மழைத்துளி கூட முத்தாகும்,
விடம் கூட மாணிக்கமாகும்,
கற்கள் கூட அதிசயப் பொருளாகும்.
அது செல்லும் பாதை சொல்லும் முடிவுரை.
போராடு தோழமையே !
சரியான பாதையில் !
சரியான நேரத்தில் !
உலகத்தமிழ் இனத்தின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.