Saturday 24 March 2012

நோர்வே இழைத்த துரோகத்திற்கு ............!


தமிழ்ஈழத்திற்கும்,தமிழ்ஈழ மக்களிற்கும் நோர்வே இழைத்த துரோகத்திற்காக எரிக்சூல்கைம்மின் அமைச்சர் பதவியைப் பறித்தால் அவருடைய அமைச்சர் பதவி ஒன்றே போனது,

அவரிற்கு எவ்வித பாதிப்பும் இதனால் ஏற்படப் போவதில்லை. ஏனென்றால் அவரிற்கு வேறொரு பதவியையோ அல்லது சிறப்பான உயர்பதவி கூடக் கொடுக்கக்கூடும். அப்படி எவ்வித உயர்பதவிகள் கிடைக்காவிடினும் இதுவரை காலமும் பணியாற்றியதன் ஒய்வுவூதியமாவது மாதாமாதம் பெற்று உல்லாசமாக வாழ்க்கையின் மீதியை இன்பமாகக் கடக்கக் கூடியதாக அமையும்.

ஆனால் அழிக்கப்பட்ட தாயகமும், தமிழிஈழமக்களின் வாழ்வின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் கற்பனை செய்து பாருங்கள் ஏதாவது தோன்றுகிறதா?

சமாதானத்திற்கு நடுநிலை வகுக்க முடியாதவர்களிற்கு ஏன் இந்தத் துரோகத்தனம்? எமது தாயகத்திற்கும், தாயமக்களிற்கும் இழைத்த அநீதிக்கு எரிக்சூல்கைமின் பதவியைப் பறித்ததனால் தமிழர் தாயகம், தமிழ்மக்களிற்கு ஏதாவது விடிவோ? இல்லையேல் நிரந்தரத் தீர்வோ கிட்டுமா?

உலகத் தமிழ் உறவுகளே நன்றாகச் சிந்தியுங்கள் இனப்படுகொலையை நடத்தியவனுக்கு எது உலக நீதியாக எந்தத் தண்டனை வழங்கப் படுகிறதோ அதே தண்டனை இனப்படுகொலையை நடத்துவதற்குத் துணைபோன சமாதானத் தூதுவரிற்கும் உண்டு. சமாதானத்தை மேற்கொண்ட நாடான நோர்வேக்கும் உண்டு.

அதைத் தவிர்ப்பதற்கான கண்துடைப்பே எரிக்சூல்கைமின் பதவிப் பறிப்பு நாடகமாகும், இது உலகையும், புலம்பெயர் தமிழர்களிற்கும் ஒரு கண்துடைப்பு வேடம், அனைவரையும் ஏமாற்றுவதன் ஊடே தங்கள் பக்கம் அனுதாப அலையை ஏற்படுத்துவதற்கான பெரிய கபட நாடகமேயாகும்.

சமாதான விரும்பிகள் என உலகை ஏமாற்றி சமாதானத்திற்கான நோபல் பரிசை வழங்கும் நோர்வே இப்படியான துரோகங்களைச் செய்து கொண்டு எப்படி நடுநிலையோ இல்லையேல் சமாதானத்திற்கான பரிசை சமாதானத்திற்காக உழைத்தவரிற்கு நேர்மையாகக் கொடுக்க முடியும்?

என்பதை மனதிற்கொண்டு தமிழ்ஈழத்தாயகம் , தமிழ்ஈழ மக்களின் விடிவு, நிரந்திரத்தீர்விற்கான முயற்சியில் உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.