Thursday 22 March 2012

ஈழம் எனும் பெயர் முழு தீவையும்...........!



இலங்கை அல்லது ஈழம் எனும் பெயர்கள் இரண்டுமே முழுத் தீவையும் குறிக்கும் பெயர்களாகும்.தமிழீழம் என்பது தீவின் வடக்கு, கிழக்கு, வடமேற்கு பகுதிகளை மட்டுமே குறிக்கும்.

இலங்கையின் ஆரம்ப காலப் பெயர்களும் தமிழ்ப்பெயர்களே தாமிரபரணி(தப்ரபேன்).ஆரம்பகாலத்தில் அங்குள்ள மக்கள் "எல்"(சிறந்தது)(எலு-திரிபு ) பேசிய மொழி பிரிவுர்றன "சிங்க-எல(சிங்கல>சிங்கள)" & "தமிழ்".ஆங்கிலேயர் ஆட்சியின் பின் தீவின் (*சிலோன்)பெயரினை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது தமிழர்கள் "எல்(எல>எழு>ஏழு>ஈழு>ஈழம்)" இன் திரிபான "ஈழம்" அல்லது "எல்"("எல்"என்றால் சிறந்தது,புகழுக்குரியது,வணங்குதற்குரியது எனும் பொருளாகும்.) ஐ ஒத்த இலங்கு (விளங்குதல்/இன்னொரு பழைய பெயரான இலங்காபுரி இலங்கு=ஒளிரும்,புரி, புரம்=வசிக்கும் இடம் நகரம்/நாடு)+கை=இலங்கை எனும் பெயர்களை முன்மொழிந்தனர்.

அதேநேரம் சிங்களவர் இலங்கையை ஒத்த(இ)லங்கா(தமிழ் பெயரான இலங்கு என்பதன் திரிபான)என்றனர். பின்னர் ஆங்கிலப் பெயராக லங்கா என்பது ஏற்கப்பட்டு அதனுடன் "திரு" ஒத்த வடமொழி முன்னோட்டான சிறீ ஐ சேர்த்து "சிறீலங்கா"=Sri Lanka"எனப்பட்டது.


வரலாற்று அறிஞர் திரு ந.சி.கந்தையாபிள்ளையும் தென்புலோலியூர் திரு மு.கணபதிப்பிள்ளை,பழந்தமிழர்.(பக்கம் 18-19)

இன்றைய இலங்கையின் தேசிய கீதத்தில் கூட ஈழமணி திருநாடு என்றே குறிப்பிட்டுள்ளது.

சிறீலங்கா தாயே-நம் சிறீலங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் போலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே-நம் சிறீலங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதாருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறிதுணிவருளே-நம் சிறீலங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமொதோர் ஒளி வளமே
நறியமலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே-நம் சிறீலங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

(1950ஆண்டு இதை தமிழ்ப் புலவர் பண்டிதர் திரு மு.நல்லதம்பி தமிழ் மொழிக்கு மொழிபெயத்தார்.)

ஆனால் அறிஞர்கள் கி.மு 1000 ஆண்டிற்கு முன்பிருந்தே இலங்கையில் நாகர்களும்,இயக்கர்களும் வாழ்ந்தார்கள்.இயக்கர்களால் பேசப்பட்ட "எலு" மொழி கொடுந்தமிழாக இருந்தது.

அதனுடன் நாகர்கள் பேசிய செந்தமிழும் சேர்ந்தே பண்டைய தமிழ் உண்டானது என்கின்றனர். வேறுசிலர் விசயனின் "லாலா" நாட்டு மொழியுடன் இயக்கர்களின் "எலு" மொழியும் சேர்ந்து "சீகளம்" என்றொரு மொழி உருவாகியது. அதுவே பின்னர் சிங்களம் உருவாகக் காரணம் என்கின்றார்கள்.

எல்:-(பெயர்ச்சொல்)= ன்
ஒளி, சூரியன், வெயில், பகல், நாள், இரவு, பெருமை, இகழ்மொழி இடைச்சொல் 
எல்லே இலக்கம் (தொல்காப்பியம் இடையியல் 21)
எல்வளை (ஒளி பொருந்திய வளையல்)

பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
எற்படக்கண்போன் மலர்ந்த (திருமுரு.74)
எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி (புறநா.170) எல்வளியலைக்கும் (அகநா.77)
எல்லிற் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் (நாலடி.8)

(இலக்கணப் பயன்பாடு)பார்க்க> http://dsal.uchicago.edu/cgbin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D&matchtype=exact&display=utf8)

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.