Sunday 7 October 2012

உயிர்காக்க நாட்டை விட்டு............!

எமக்கு நோர்வே வேண்டாம் இலங்கையே போதும் பொதுமக்கள் ஆர்பாட்டம் !

கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்திற்கு முன்னாள் நேற்று முந்தினம், (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. நோர்வேயில் பிரசாவுரிமைப் பெற்றவர்களின் உறவினர்களால் முற்பகல் 11.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது என அதிர்வு இணையம் அறிகிறது.

நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கி வருகின்ற சிறுவர் காப்பகத்தினால் தமது பிள்ளைகள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டதை கண்டித்தும், அவர்களை மீட்டு தருமாறும் வலியுறுத்தியும், ஒசு(ஸ்)லோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் தாய்மாரைக் காப்பற்றக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பில் இடம்பெற்றது.

நோர்வே சட்டத்தின்படி வீடுகளிர் சிறுவர்கள் பெற்றோர்களால் கண்டிக்கப்பட்டாலோ, இல்லையேல் ஒரு வயதுக்கு மேல் அவர்களை தம்மோடு ஒரே கட்டிலில் உறங்க அனுமதித்தாலோ அதனை ஒரு பெரிய குற்றமாக அரசு கருதுகிறது.


இவ்வாறு நடந்தால், நோர்வே அரசு பிள்ளைகளைப் பொறுப்பேற்று அவர்களை வழிநடத்தும். இலங்கையர் உட்பட வெளிநாட்டவர்கள் பலரது பிள்ளைகள் இந்த சிறுவர் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிள்ளைகளை ஒழுங்கான முறையில் பராமரிக்காததாலும், கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சண்டையால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாலும் அவர்களை பெற்றோரிடமிருந்து பிரித்து தாம் பராமரித்து வருவதாக நோர்வே அரசாங்க தரப்பினர் தெரிவிக்கின்றனர். 

இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்று தெரியவில்லை.

இவ்வாறு நோர்வே காப்பகத்தினால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையர்கள் உட்பட சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் பெரும் துயரங்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவஎர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கக் கூறி, கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்துக்கு முன்னல் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.