Sunday 8 April 2012

3,000 ஆண்டுகள் வாழும் பிரபாகரன் நாமம் !

பிரபாகரன் நாமம் இன்னும் 3,000 ஆண்டுகள் வாழும்! அதனை எவராலும் அழிக்கமுடியாது!- விக்கிரமபாகு.



தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் சனாதிபதி
மகிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது வேலுப்பிளை பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார். பிரபாகரன் என்ற நாமம் இன்னும் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். இவ்வாறு தெகிவளை-கல்சிசை மாநகர சபை உறுப்பினர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். உதயன் பத்திரிகைக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:

புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் பிறந்த மண்ணுக்காக விடுதலை வேண்டிப் போராடியவர். அவர் தாய் மண்ணுக்காக முள்ளிவாய்க்கால் வரை சென்று தனது உயிரையே கொடுக்கத் துணிந்தவர். அவர் உயிருக்குப் பயந்து ஓடி ஒழியவில்லை. அவரின் குடும்பமே மண்ணுக்காகத் தன்னைத் தியாகம் செய்தது.

பிரபாகரன் தமிழர்களின் உரிமைகளையும் அடையாளங்களையும், வளங்களையும் பாதுகாக்கவே போராடினார். தான் பிறந்த மண்ணைக் காப்பதற்கு இறுதிவரை பாடுபட்டார்.

அவரின் கொள்கைகளை நாம் ஏற்கமாட்டோம். அவர் சிற்சில தவறுகளை இழைத்திருந்தாலும் அவர் ஒரு சிறந்த விடுதலைப் போராளி. அதனை நாம் ஒருபோதும் மறுக்க மாட்டோம்.

அவர் தேசத்துரோகி அல்லர். பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். இதனை எவராலும் அழித்துவிடமுடியாது. இது உண்மையும்கூட.

தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் சனாதிபதி
மகிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார்.

மக்களை வீதியில் இறக்கிப் போராடித்தான் தேசப்பற்றைக் காட்டவேண்டுமென்றில்லை. அது மனதில் இருந்தால்போதும்.

பொருள்களின் விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து மக்களின் அடிவயிற்றில் அடிக்கும் மகிந்த அரசு முதலில் நிர்வாக முறைமையைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஏனைய விடயங்களைப் பற்றிச் சிந்திக்கலாம் பார்க்கலாம் என்றார் அவர்.

எதிரியால் ஆக்கிமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.