Saturday 7 April 2012

கோடரிக்காம்புகள் .............!

இலங்கை அரசின் தேயிலை ஏற்றுமதி தொடக்கம், ஆடை ஏற்றுமதிவரை வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் இலங்கை எவ்வாறு லாபம் ஈட்டிவருகிறது என்று பலரும் எண்ணலாம். இலங்கைக்கு முன்னெப்போதும் இல்லாதவாறு சுற்றுலாப் பயணிகள் செல்ல ஆரம்பித்துள்ளனர். லட்சக்கணக்கில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் தேசிய விமானசேவையைப் பயன்படுத்துகின்றனர்.

அவர்கள் இலங்கைக்கு கொண்டுசென்று செலவுசெய்யும் பணம், இலங்கையின் அன்னியச்செலாவணியை அதிகரித்துள்ளது. போதாக்குறைக்கு புலம்பெயர் தமிழ் மக்களும் இலங்கைக்குச் சென்றுவருவதை அதிகரித்துள்ளனர்.

இதனால் இலங்கை அரசானது தமிழர்களுக்கு எதிராக போர் நடத்த வாங்கிய கடனின் ஒரு பகுதியை அடைக்க, புலம்பெயர் தமிழ் மக்களே பணத்தைக் கொடுத்து உதவும் நிலை தோன்றியுள்ளது எனலாம்.

இலங்கைப் பொருட்களைப் புறக்கணித்தல், இலங்கைக்குச் செல்வதை தவிர்த்தல் என்பது போன்ற போராட்டங்களை புலம்பெயர் தமிழர்கள் மெல்லமெல்ல கைவிடும் நிலைதான் தற்போது தோன்றியுள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.

மானங்கெட்ட தமிழினம் தமக்குள்ள தாமே அடித்துக்கொண்டு இலங்கை அரசின் கடனை அடைப்பதற்கு முண்டியடித்துக் கொண்டு முன்னிற்கிறது.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.