Monday 2 January 2012

நக்குகின்ற நாய்களிற்கு !...........


தத்தமது சொந்த நலன்களிற்காக தமிழ்ஈழத்தேச விடுதலைப் போராட்டத்தையும்,முள்ளிவாய்க்காலின் அழிவின்பின் தாயகத்தில் பாதிப்பிற்குள்ளான மக்களையும் பயன்படுத்தி.


அந்தத்தமிழ் தேசம், அத்தேசத்திற்கான மக்களின் நிவாரணத்திற்கென உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களிடம் பெருநிதியை மண்கொள்ளை அடித்த ஈனர்களால் எப்படித்தான் தமிழினத்தின் விடியலிற்கான சூரியத்தேவனாகிய தமிழ் ஈழத்தேசியத்தலைவரை இழிவாக பேசமுடிகிறது?


தமிழ்ஈழத்தாயக,தாயகமக்கள் இவ்விரு கருப்பொருளை தமது ஊதுகுழல்களின் மூலம் நீலிக்கண்ணீரை வடித்து பணம் கொள்ளை அடித்தவர்களைப் போன்று தேசியவிடுதலைப் போராட்டத்தை நடத்தியவர்கள் ஒருபோதும்.தமிழ்மக்களை முட்டாள்கள் என்று நினைக்கவும் இல்லை.


புலம்பெயர் தேசமெங்கும் வாழும் தமிழர்களின் மேல் மிகநம்பிக்கையுடன் எக்காலத்திலும் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தத்தமது கடமைகளை தேவைகளிற்கு ஏற்றாற்போல் நிறைவேற்றி அன்பாகவும் ,தோழமை நட்புடன் நடந்து கொண்டனர்


அதைவிட்டு தேசியத்தை வழிநடத்துபவரின் கல்வித்த கமையைப் பற்றி எக்காலத்திலும் விமசித்ததுகிடையாது.அப்படி எங்கள் சூரியத்தேவனை விமர்சிப்பதற்கு எவரிற்கும் தகுதியும் கிடையாது.


ஒருவரைப்பற்றி அடுத்த ஒருவர் குற்றச் சாட்டை முன்வைப்பதானால் தான் குற்றமற்றவராக இருந்த நிலையிலேயே அதுசாத்தியப்படும்,"நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன" அனைத்தும் ஒன்றுதான்.


இப்படியான ஈனர்களை இனம்கண்டு மிகவிழிப்பாக எக்காலத்திலும் மறக்காது,மன்னிக்காது.தமிழீழத்தாயகம்,தாயகமக்களது விடிவிற்காக உலகத்தமிழரின் ஒன்றுபட்ட குரலுக்காக இணைந்து கொள்வோம்.




தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.