புலம்பெயர் வாழ்வில் உலகநாடுகளில் வாழும் தமிழ்த் தொழிலதிபர்களாக இருப்போரால் அண்மைக்காலத்தில் புலம் பெயர்ந்துள்ள அகதிநிலை மறுக்கப்பட்ட தமிழ்மக்களை தவறாகப் பயன்படுத்தி நிறைய ஊதியத்தை நிலுவையில் செலுத்தாது விட்டுவிட்டு.

அவர்களிற்கான ஊதியநிலுவையைச் செலுத்தத் தப்பிக்கொள்வதன் மூலம் ஆடம்பரமான வாகனங்களும், மிகப்பிரமாண்டமான மாளிகைகளையும் வாங்கி பகட்டான வாழ்கையை நடத்துபவர்கள்.

இது "பனையால் விழுந்தவனை மாடு எறிமிதித்தது" போன்றதேயாகும். உங்களின் உடன்பிறப்புகளையும் இப்படித்தான் கையாள்வீர்களா? எதைச்செய்வதானாலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயற்பட்டால் நன்மைபயக்கும்.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.