Tuesday 24 January 2012

புலம்பெயர் தமிழர்களால் ஏன் முடியாது?

புலம்பெயர் வாழ்விலுள்ள தமிழர்களினது சிந்தனையும்,செயற்பாடுகளும் மிகவும் அருவருக்கத்தக்கதாகவுள்ளது.எப்படியானது என்றா கேட்கிறீர்கள்? இப்பொழுது நடைபெறும் பிறந்த நாள்,பூப்புனித நீராட்டு,திருமண வரவேற்பு,திருமண ஆண்டு விழா என்பன மிகவும் ஆடம்பரமாக, கேளிக்கைகள்,மதுபானங்கள்,நேரடி ஆட்டம், பாட்டம் என்று ஒருவருக் கொருவர் போட்டியில் எமது கலை, கலாச்சாரம் என்பவற்றைத் தொலைப்பதொடு மிகுந்த பணவிரயத்தையும் ஏற்படுத்துகிறோம்.

ஒருகணமேனும் எங்களது தாயகமக்களின் நிலையைச் சிந்திக்கிறோமா? இலையேல் அகதிமுகாம்களில் எதிகாலத்தினைக் கேள்விக்குறியாக உள்ள நிலையில் வாழும் மக்களின் எதிர்காலச் சந்ததிக்காவது உதவலாமே?

உதாரணமாக ஜெயா தொலைக்காட்சியில் விசுவின் மக்கள் அரங்கம் என்னும்


 


நிகழச்சியின் ஒரு சிறுபகுதியைப் பார்த்தாவது உங்களது நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமே? அப்படிச் செய்வதன்மூலம் இது போன்று பல அகதிமுகாம்களில் எதிர்காலக் கல்விக்காக எங்கும் எம்இளைய தலைமுறை மாணவர்களின் கல்விக்கண்ணிற்கு ஒளியூட்டலாமே?

எங்களது வரும்காலத் தலைமுறை கல்வியறிவுடன் கூடிய பலமிக்க தலைமுறையாகத் திகழ்வதன் மூலமே நாம் இழந்த உரிமைகளை அடைவதற்கு ஏதுவான வழியாகும்.ஒருவிடயத்தைச் செயற்படுத்துவதற்கு முன்பாக பலமுறை சிந்தித்துச் செயற்படவும்.   

தமிழர் தாயகத்தின் விடுதலைக்காக உலகத்தமிழரின் குரலாக ஒன்றுபடுவோம். 

நன்றிகள்.