Thursday 12 January 2012

நீயா தமிழனின் .........?



சூடு சொரணை கொஞ்சமும் இல்லை
சொல்லடா நீயா தமிழனின் பிள்ளை?
தோட்டத்தில் தன்னை அழித்தவன்
வீட்டுக்கே தோரணம் ஆனது வாழை!- நீயும்




நாட்டினில் உன்னை அழித்தவன்
காலையே நக்கினாய் நீ ஒரு கோழை!
கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! - அவன்




சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ
நீ சாக்கடை நாய்போலத் தின்றாய்!
தீயவர் தலையை திருக மறந்தாய்

உன் தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட
ஆயிரம் பெருமை படைத்த உன்
அன்னை மண் அழியநீ அல்லவா பொறுப்பு?






என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில் இன்னொருவன் கொடி பறக்கும்! - அட நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில் நாளை அவன் பிள்ளை பிறக்கும்!

நன்றிகள் பல