முள்ளிவாய்க்காலின் வைகாசி-18 (may-18-2009)க்கு முன்பு புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழத்திற்கான பலகட்டமைப்புக்கள் நேர்த்தியாக செயற்பட்ட காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சில அமைப்புக்கள் வைகாசி -18 காலகட்டத்தில்மிகப்பெரும் நிறுவனங்களாக வளர்ச்சியுற்றது யாபேரும் அறிந்ததே.
ஆனால் அந்த நிறுவனங்களின் ஆரம்பம் எப்படியானது?
அந்நிறுவனங்களின் ஆரம்ப வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கியவர்கள் யார்?
அந்நிறுவனங்களின் உடமைகளை வாங்குவதற்கு யார்யார் பங்களித்தனர்?
அந்நிறுவனங்களிற்கு உரித்தானவர்கள் யார் என்றாவது தெரியுமா?
போது மக்களிற்குத்தான் தெரியவில்லை என்றாலும் அந்நிறுவனத்தைத் தோற்றுவித்தது முதல் முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் மௌனவிக்கப் படும்வரை,இல்லையேல் இன்றும் அங்கு மிகவும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களிற்குத் தெரியும்தானே?
அதனுடைய சொத்துக்கள் யாரிற்கு உரித்து என்று ஏன் அப்படிப் பட்டவர்கள் கூட பினாமிகளாக இருந்தவர்கள் உரிமை கொண்டாடும் போது அதைத் தடுத்தோ, இல்லையேல் எதிர்ப்பைத் தேரிவித்தோ,அதற்கும் அவர்கள் இணங்காவிடின், உடைமைகளிற்கு உரித்தான மக்க்களிற்கு
ஏன் தெரியப் படுத்தப் படவில்லை?
என்று யாராவது சிந்திக்கிரீர்களா?
ஏன் தெரியப் படுத்தப் படவில்லை?
என்று யாராவது சிந்திக்கிரீர்களா?
ஏன் சிந்திக்கவில்லை?
அதைச்சிந்தியாது குற்றம் இளைப்பவர்களிற்கு இப்போதும் ஆதரவாகக் கதைப்பதும்,யாராவது உண்மையை அல்லது தவறைச் சுட்டிக் காட்டும் போது தமக்கு எதுவும் தெரியாதது போன்று நடிப்பவர்களும் இப்போதும் எம்மிடையே இருக்கின்றனர்.
பொதுமக்களின் உடைமைகளை மண்கொள்ளை அடிக்கும் நோக்கத்துடன் நாங்களும் தாயகத்தின் செயற்பாட்டாளர்கள் என்று வேடமிட்டு எம்மிடையே பலர் செயற்பட்டதை அறிவீர்கள்.
எப்பொழுதும் மிகவிழிப்புடன் புலம்பெயர் தமிழ்மக்களை நடந்துகொளுமாறு மிகத்தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
இக்கட்டுரையின் நோக்கம் தாயகத்திற்காக உண்மையான செயற் பாட்டாளர்களின் மனதைப் புண்படுத்துவதற்காக இல்லை.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.