Wednesday 4 January 2012

மகுடம் செய்வோம்!




காயம் நடுங்குதடா - எம்
தாய் நிலத்தை எதிரி சிதைக்கையிலே
மானம் இருக்குதடா - இந்த
மண்ணில் எமக்கொரு மகுடம் செய்வோம்!


பட்டபாடு எல்லாம் - நாங்கள்
மறந்துபோக ஈனர்கள் இல்லை
இட்ட வடுக்களுக்கு ஒருநாள்
சுடச்சுட நெருப்பாய் பொங்கி எழுவோம்
உன்னை எரிப்போம்




உணவுதர மறுத்தாய் - நீ
மருந்துக்குத் தடை விதித்தாய்
தூய்மையாய்க் கட்டி காத்திட்ட எங்களின்
பண்பாட்டைச் சிதைத்தாய்




வளங்களையே அழித்தாய்
எங்கள் கன்னியரைக் கற்பழித்தாய்
எங்களின் வீதியில் உங்களின் பெயர்களை
வேண்டுமென்றே திணித்தாய்

நித்திரைகள் கெடுத்தாய்
நித்தம் எம் இனத்தை சுட்டாய்
வீதியில் நாங்கள் நடமாட - எதிராய்
ஊரடங்கு செய்தாய் -




எம் இனத்திலுள்ள
பித்துப்பிடித்தோரை உம்மிடம்
சேர்த்துக்கொண்டாய் - பின்பு
எமக்கே எதிராக்கினாய்




இத்தனை செய்தததை மறப்போமா - நாம்
உனக்கடிமையாய் வாழ்வோமா?
இதனால்



காயம் நடுங்குதடா - எம்
தாய் நிலத்தை எதிரி சிதைக்கையிலே
மானம் இருக்குதடா - இந்த
மண்ணில் எமக்கொரு மகுடம் செய்வோம்!!



தாயக, தாயகமக்களின் விடிவிற்காக உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.