Monday 4 June 2012

உலகின் தொல்குடி தமிழர்கள்தான்...........!



















அவுசு(ஸ்)த்திரேலியாவை சார்ந்த பழங்குடிகள் பேசும் மொழி தமிழை ஒத்து உள்ளது. இவர்களுக்கும் நமக்கும் பந்தம் உள்ளது. குமரிகண்டத்தில் ஒன்றாக இருந்து பிரிந்திருக்கலாம்.

நண்பர்களே... தமிழர்கள்தான் இந்தியாவில் அல்ல, ஆசியாவில் அல்ல, உலகின் தொல்குடி என்பதற்க்கான ஆதாரம் கீழே.... தேசிய புவியல் (National Geographic)மற்றும் மரபணு ஆரய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஸ்பென்சர் வெல்ஸ் மற்றும் திரு.பிச்சப்பன் என்பவரும் இணைந்து உலகளவில் நடத்திய ஆரய்ச்சியில் மனிதனின் இடப்பெயர்ச்சியினை மரபணுக்கள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

அதில் நம் மதுரை அருகிலுள்ள சோ(ஜோ)திமாணிக்கம் என்னும் கிராமத்தை சேர்ந்த தமிழர் ஒருவரின் குடும்பத்தில் 13 நபர்களுக்கு ஒரே வகையான M130 என்னும் மரபணுவை கண்டறிந்துள்ளனர்.

இம்மரபனு 70,000 வருடங்கள் பழமையானது இதன் தொடர்ச்சிகள் ஆபிரிக்கா மற்றும் அவுசு(ஸ்)த்திரேலிய பழங்குடியினரிடம் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் மனித சமூகத்தின் இடப்பெயர்ச்சி ஆபிரிக்காவிலிருந்து தென்னிந்தியா வழியாக அவுசு(ஸ்)த்திரேலிய சென்றடைந்துள்ளனர் என்பது உறுதிபடுத்தப் பட்டுள்ளது.

தமிழன் தான் இந்தியாவின் தொல்குடி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்று நம் நிலை ......

உலகமே நம்மில் ஆரம்பித்தது இன்று நாம் அடி வாங்காத இடமே இல்லை எனும்நிலை , இலங்கையிலிருந்து, மலேசியா, மும்பை, கர்நடகா, ஆந்திரா, கேரளா, இந்தியா, ஏன் தமிழகத்திலேயே தமிழக அரசு நம்மை விரட்டி விரட்டி அடிக்கிறது.

முதல் மனிதன் தமிழனே. தமிழில் உள்ள சொல் வழக்கு ஆதிகாலம் அதாவது முதல் மனிதன் ஆதம்(அலை) அவர்களை குறிக்கும். ஆதம் பாலம் இந்தியாவையும், இலங்கையையும் இணைக்கும் பாலம், முதல் மனிதரின் பெயரில் உள்ளது.

ஆதமின் முதல் இரண்டு மகன்கள் ஆபில், காபில் அவர்களின் கல்லறை தமிழ் நாட்டிலேயே தான் உள்ளது மேற்கூறியவைகளை கொண்டு உலகின் முதலும் மூத்தகுடியும் தமிழ் குடியே அவனே முதல் குடிமகன் என்பதை நாம் உணரலாம் .

காரணம் நம் வரலாறு நம்மிடம் மறைக்கப்பட்டதுதான்.....
தோழர்களே அதை மீட்க்க வேண்டியது நம் கடமை....
தமிழனுக்கு தான் யார் என்பதை உணர்த்த வேண்டிய தருணம் இது...
ஒன்றிணைவோம் வரலாறூ மீட்போம்....

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல.