Tuesday 5 June 2012

போட்டியில் தமிழீழம் சார்பாக............!


வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம் சார்பாக ஓர் அணி பங்கேற்கவுள்ளது.இப்போட்டியில் பங்குகொள்ள நேற்று மற்றும் முன்தினம் பல நாடுகளில் இருந்து வெளிக்கிட்ட தமிழீழ அணி ஈரான், குர்திஸ்தானில் தரையிரங்கியுள்ளார்கள்.












வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டி யூன் 2012, எர்பில், குருதிஸ்தான் (வட இராக்கு) இல் இடம்பெறவுள்ளது. FIFA உலகச் சுற்றுக்கிண்ணப் பட்டியில் அனுமதி பெறாத மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெறப்படாத தேசிய இன மக்களுக்காகவே வீவா சுற்றுக்கிண்ணப் போட்டி Nouvelle Fédération-Board (N.F. Board) ஆல் நடாத்தப்படுகிறது.












இவ்வாண்டு வீவா சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம், டார்பூர், இராக்கி குருதிஸ்தான், வட சைபிரசு, ரேடியா, ஒக்சிரான்ரியா, புரோவென்சு, மேற்கு சகாரா மற்றும் சான்சிபார் ஆகிய ஒன்பது அணிகள் மோதவுள்ளன.
















இவ்வணிகள் நெல்சன் மண்டேலா வெற்றிக்ண்ணத்துக்காக கடுமையாக போட்டியிடவுள்ளன. தென் ஆபிரிக்காபின் முன்னால் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தன் மக்களின் விடுதலைக்காக விடாமுயற்சியுடன் போராடினார். அவரின் நினைவாகவே இவ்வெற்றிக்கிண்ணத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.