Wednesday 6 June 2012

தமிழினத்தின் தலைவிதியை..............!

அன்பர்களே..!

நாம் தூங்கவேண்டிய நேரமில்லை இது.தமிழினத்தின் தலைவிதியை இனியாவது நாம் ஒவ்வொருவருமே இணைந்து தாங்கவேண்டிய வேளை இது..இல்லையேல் எமது இனம் ஈழத்தில் இருந்தசுவடே தெரியாமல் அழிந்துவிடும்..அல்ல..அழிக்கப் பட்டுவிடும்.

இப்படி நான் சொல்லும்போது இங்கே சிலருக்கு சிரிப்பு வரலாம்..ஆனால் நான் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது.?

முள்ளி வாய்க்காலில் விடுதலை புலிகளின் ஆயுதங்கள் உறங்கியபின் அங்கே ..நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் ஒவ்வொன்றாக இரைமீட்டுப் பாருங்கள் நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும்.

புலிகளின் ஆயுதங்கள் உறங்கியதும் ஈழத்தில் நிறுவப்பட்டிருக்கும் புதிய புத்த கோயில்களின் எண்ணிக்கை நூற்றுக்கு மேல்.. அதேகாலப் பகுதியில் முஸ்லீம்களின் பள்ளிவாசல்கள் ..தமிழர்களின் கோயில்கள்.என்பன வற்றுக்குகூட அங்கே மூடுவிழா நடந்து வருகின்றது.

இதைகூட உங்களால் மறுக்கமுடியுமா.?

தம்புள்ள பள்ளிவாசலுக்குள் சிங்கள தேரோக்கள் புகுந்து அதை இழுத்து மூடும் அளவுக்கு அங்கே முசு(ஸ்)லிம்களுக்குகூட சுதந்திரம் இல்லை.. திருக்கேதீசு(ஸ்)வரம்.கோயிலில் புத்த கோயில் என்று வந்தது ..? திருகோணமலை மருத்துவ மனையில் இருந்த நீண்டநாள் பிள்ளையார் கோயிலைக்கூட மூடுகிறார்கள் அது எப்போது நடந்தது?

இன்று மிக அண்மையில் கிளிநொச்சி பிள்ளையார் கோயிலும் மூடப்படுகிறது அதற்கு பதிலாக புத்தகோயில் வந்து விட்டது..

அடுத்து..

தமிழ் பெண்களை வலுக்கட்டாயமாக சிங்கள ராணுவத்தினருக்கு திருமணம் முடித்துவைத்து..விசயனின் ஆட்சிக் காலத்தை மீண்டும் நிலை நாட்டுகிறது ராசபக்சாவின் அக்கிரம இனவாத ஆட்சி..அதுமட்டுமா..?

எமது தமிழ் பெண்கள்..விதவைகளை ...வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி எமது பாரம்பரிய கலாச்சாரத்தை படுகுழியில் தள்ளிக் கொண்டு இருக்கிறது பாசிச ராசபக்சா ஆட்சி.இதைவிட இன்னும் ஏராளம் உண்டு.தமிழர்களின் பாரம்பரிய காணிகள் ராணுவ முகாம்களாக மாற்றப்படுகின்றன.

வேறு சில காணிகளில் தென்பகுதிச் சிங்களவர்கள் கொண்டு வந்து குவிக்கபட்டு அத்துமீறி காணிப் பதிவு செய்யப் படுகின்றது..யாழில் சிங்களக் கடைகள் பெருகத் தொடக்கி விட்டன...நாளை தமிழ் கடைகளுக்கு என்ன நடக்கும்..? யாராலும் உத்தரவாதம் அளிக்க முடியாது.

இவைகள் இன்று நடந்து கொண்டிருப்பவை..நாளை என்ன நடக்கும் என்று சிந்தித்து பாருங்கள்..தமிழ் பெண்களை கற்பழித்தல் என்பது ஒரு குற்றமே இல்லை என்னும் சட்டம் கொண்டுவரப் படலாம்.

ஏன் தெரியுமா..?

இப்போது சட்டமே இல்லாமல் அதுதானே அங்கே மிக எளிதாக நடந்து கொண்டு இருக்கிறது.யாழ்பாணத்திலும் கிழக்கிலும் தமிழ் எழுத்துக்கள் கடை பலகைகளில் எழுதுவது குற்றம் என்று சட்டம் வரும்.

வீதிகளுக்கு பல இடங்களில் யாழ்ப்பாணத்திலேயே இன்று சிங்களப் பெயர் பலகைகள் வரத் தொடங்கி விட்டன.

அது நாளை..?

யாழ் பல்கலைக் கழகத்திலும் கூட புத்த கோயில்கள் சிங்களமயம்.ஆகத் தொடங்கி விட்டன..நாளை..அங்கே ஒரு தமிழ் பீடமே இருக்கும்என்று சொல்வதற்கு யாராலுமே உ த்தரவாதம் அளிக்க முடியாது.

இதற்கிடையில் தினமும் எண்ணிறைந்த கொலைகள்..வெள்ளைவான் கடத்தல்கள்..இவை யாவுமே எதனால் வந்தது..?

புலிகளிடம் ..தமிழரிடம் ஆயுதம் இல்லை அதனால்தான்..



















அன்பர்களே..அரசியல் தீர்வுதான் இலங்கை பிரச்சனைக்கு ..அதுவும் தமிழர் பிரச்னைக்கு ஒரே வழி என்று சொல்வோரின் வாதம் உண்மையானதுதான்.

ஆனால்..அதை செய்து முடிககும்போது ஈழத்தில் தமிழ் இனமே இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் பட்டிருக்கும் அப்போது யாருக்கு தேவை அந்த தமிழ் ஈழமோ அல்லது மாகாண சபையோ?

சாமியே திருடப்பட்டபின் கோயில்கள் எதற்கு..?கண் போனபின் சூரிய நமஸ்காரம் எதற்கு..?அதன் பின் ஆயிரம் சம்பந்தர்களோ இல்லை ஆயிரம் உருத்திர குமாரர்களோ எதுவும் செய்ய முடியாது.

என்னை பொறுத்தவரை..ஒரு காலத்தில்..புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் தீர்க்க தரிசனத்துடன்தான் போராடினார்கள்..ஆயுதப் போராட்டம் ஒன்றே ஈழத் தமிழனுக்கு விடிவை கொடுக்கும்.

அதுதான் மறைக்கமுடியாத உண்மை ..மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும்தமிழர்கள் எமது இனத்தில் உள்ளவரை நாம் தனித்துவம்மிக்க ஒரு இனமாக ஈழத்தில் தலை நிமிர்ந்து நிற்க முடியாது..அதுமட்டும் உண்மை.

ராசபக்சா ஒரு இனவாதி மட்டுமல்ல..ஒரு பாசிசவாதி மட்டுமல்ல..அவன் ஒரு மனிதனே அல்ல ..அதுதான் உண்மை..மற்றவைகளை உங்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன்.!

இதை உணர்ந்து ..இன்று லண்டனில் அந்த கொடூரன் எம்மினத்தின் பரம
எதிரி..இருக்கும்வரை தமிழர்களாகிய உங்களின் போராட்டம் எரிமலை என வெடிக்கவேண்டும் எனவே இன்று 'கமன்வெல்த்' செயலகம் அருகே குறிப்பிடப்பட்ட இடத்தில் ஒன்றுகூடி எமது இன ஒற்றுமையை உலகுக்கு எடுத்து காட்டுங்கள்..

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.