"தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு மேடைபோட்டு அரசியல் பேசியோ அல்லது கணனிகளின் முன்னால் அமர்ந்துகொண்டு தட்டச்சு செய்ததன் மூலமோ உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அந்த அமைப்பு முப்பத்திரண்டாயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களின் உயிர்க்கொடையாலும், அதைவிட அதிகமான போராளிகளின் இரத்தத்தாலும் பல இலட்சக்கணக்கான மக்களின் வியர்வையாலும் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்".
இப்படியான பல தியாகங்களினால் உருவாக்கப்பட்ட உன்னதாமான அமைப்பை தமிழீழத்திலும், தமிழீழத்துக்கு வெளியேயும் பலர் தங்களுடைய சுய இலாபங்களிற்காக விளம்பரச்சின்னம் போன்று தத்தமது தேவைகளிற்கு ஏற்ப உபயோகிப்பது மிகுந்தகண்டனத்துக்கும், மிகுந்தவேதனைக்குமுரிய விடயமாக மக்கள் கவனத்திற்கொண்டு.
உங்களினது கடமைகளை தமிழீழத் தாயகத்தினதும், தாயகத்தில் வாழும் மக்களின் விடிவிற்காகவும் இருக்கக் கூடியதாக முன்னெடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றேன்,
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.