Monday, 17 September 2012

இலங்கைக் கடைசித் தமிழ் மன்னனின்......!

கடைசி இலங்கை தமிழ் மன்னனின் சமாதி: 2300 ஆண்டு பாரம்பரியம்மிக்க இலங்கை தமிழ் மன்னர் ஆட்சியை ஆங்கிலேயர்கள் முடிவுக்கு கொண்டுவந்த பின், அங்கு கடைசியாக ஆட்சி புரிந்த நான்கு மன்னர்களின் ஒருவரும் கண்டி பகுதியை ஆட்சி புரிந்து வந்த தமிழ் மன்னருமான "சிறீ விக்ரம ராச சின்கா" அவரை ஆங்கிலேயர்கள் தமிழகத்துக்கு நாடுகடத்தி வேலூர் கோட்டையில் வீட்டு கைதியாக சிறைபிடித்து வைத்தனர்.

பின்பு அவர் இறந்த பின் அவரை வேலூர் கோட்டையிலேயே புதைத்தனர். அவரின் சமாதி இன்றும் வேலூர் கோட்டையில் காணலாம்.

சிறப்பு செய்தி:

அவரது ஆட்சி காலத்தில் உபயோகிக்கப்பட்ட சிங்கம் வாள் ஏந்தி நிற்பது போன்ற கொடியை, அவர் நினைவை போற்றும் விதமாக தற்போதுள்ள இலங்கை கொடியிலும் இடம் பெற செய்துள்ளனர்... 

அந்த மன்னன் ஒரு இந்திய தமிழர்,அவருடைய உண்மையான பெயர் கண்ணுசாமி , கடைசியாக கண்டி ராச்சியத்தை ஆண்ட மன்னன் முடி சூடி கொள்ளும் போது ,அந்த சிங்கள (சின்ஹல) மக்களுக்காக பெயரை மாற்றி வைத்ருக்கிறார்கள்.

திருமண பந்தத்தால்தான் இவருக்கு இந்த ஆட்சி கிடைத்ததாக படித்த கடைசியில் கண்டி ராச்சிய சிங்கள (சின்ஹல)  மக்களும், பிரதானிகளும் தான் வெள்ளையரிடம் காட்டி கொடுத்தார்கள்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.