Wednesday 19 September 2012

விழித்து எழு தமிழா ......................!!


உலகின் முதல் கப்பல் படை, யானைப்படை நிறுவி, போர்கள் பல வென்று தரணி ஆண்ட எம் தமிழினம் !!

பொது மறையாம் திருக்குறள் தந்து உலகினுக்கு வாழ்க்கை நெறியை கற்று தந்த எம் தமிழினம் !!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கோள்களின் அமைப்பையும், தாக்கத்தையும் அறிந்திருந்த எம் தமிழினம் !!

ஓர் அறிவு உயிர், ஈர் அறிவு உயிர் என தொல்காப்பியம் மூலம் டார்வினுக்கு முன்னரே உயிரின் தோற்றத்தை கூறியிருந்த எம் தமிழினம் !!

உலோகம் பற்றி ஏனைய நாடுகள் அறியாத காலத்தில் அவற்றை கொண்டு அழகிய சிலைகள் தந்த எம் தமிழினம் !!

பெரிய கோவில், மகாபலிபுரம், மீனாட்சி அம்மன் கோவில் என கட்டிடக்கலையில் வியத்தகு சாதனைகள் புரிந்த எம் தமிழினம் !!

அணுவின் சக்தி குறித்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாடிய எம் தமிழினம் !!

பல நூறு சித்தர்களையும், அவர்கள் மூலம் சித்தவைத்தியத்தையும் தந்த எம் தமிழினம் !!

ஆதிவாசியாய் ஏனைய உலகம் இருந்த பொழுதும் (கல்)அணைக் கட்டி, யானை கொண்டு போரடித்து விவசாயம் செய்த எம் தமிழினம் !!

இன்னும் எண்னில் அடங்கா மேன்மை வாய்ந்த எம் தமிழினம் இன்று, தன் முன்னே சொந்த சகோதரர்(ரி)கள் சாகக்கண்டும், ஒன்றும் செய்ய இயலாத கோழை இனமாக மாறியது ஏனோ?

'அம்மா', 'அப்பா'வை விடுத்து, 'மம்மி'களையும், 'டாடி'களையும், அரவணைத்து கொண்டது ஏனோ?

தன் வாழ்க்கை நெறியை தவிர்த்து, மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு மாறியது ஏனோ?

அறிவு மழுங்கி மேற்கத்திய நாடுகளுக்கு உழைக்கும் அடிமைகளானது ஏனோ?

தமிழன் என்ற கர்வத்தினை, இறுமாப்பினை இழந்து தமிழன் என்று சொல்லக்கூட தயங்குவது ஏனோ?

10000 ஆண்டுகள் மேற்ப்பட்ட நம் மேன்மையை, அறிவை. 800 ஆண்டுகளே ஆக்கிரமித்த முகலாயர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும் பறி கொடுத்து விட்டோமா?

இந்நிலை மாற வேண்டாமா?

நம் அடிமை மோகம் தனிய வேண்டாமா?

இழந்த மேன்மையை மீட்க வேண்டாமா?

ஆழந்த நித்திரையில் இருக்கும் நாம்.. விழித்து எழுவோம் !!

வீறு கொண்டு எழுவோம் !!

தமிழினத்தின் பெருமையை ஆராய்ந்து அறிந்து உலகினுக்கு உரக்கச் சொல்வோம் !!.

இழந்த மேன்மையை அடைவதற்கான இந்த முதல் படியினை எடுத்து வைப்போம் !!

தமிழைக் கற்று உணர்ந்து மேலும் மேன்மையடைய இன்னும் பல சாதனை செய்வோம் !!

நம் மொழி தொன்மையானது என்ற பெருமையை காத்து நம் சந்ததியினர்க்கு வழங்குவோம்!!

பின் விடியல் பிறக்கும் நம் தமிழுக்கும், நம் தமிழினத்திற்கும் !!

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.