தடம் பதித்து வாழ்பவன் தமிழன் ,தடம் புரண்டு வாழ்பவன் அல்ல
தடம் பார்த்து நடப்பவர்கள் மனிதர்கள். தடம் பதித்து நடப்பவர்கள் மாமனிதர்கள். மகத்தான தடங்களைப் பின்பற்றுங்கள். நீங்களும் மாமனிதர்தான்.
தம் தமிழ் நாட்டு எல்லைகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவர்கள், அன்னிய சூழலில் வாழப் பிரியமில்லாதவர்கள் என்று தமிழர்களைக் குற்றம் சாட்டமுடியாது.
அவர்கள் தம் உடலைத் தாங்கிக் கொண்டு எங்கும் செல்லத் தயங்க மாட்டார்கள். உலகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் அவர்கள் வயிறு பிழைக்க வேலைக்குச் செல்வார்கள். ஆனால் அவர்கள் மனம் அங்கு இராது.
தலைமுறை தலைமுறையாக அவர்கள் ரத்தத்தில் ஊறித் தொடரும் ஒரு மன நிலை, உலகில் எங்கு சென்றாலும், அந்த அன்னிய தேசத்தின் சமூகத்தை, சூழலை, எதையுமே அறிந்து கொள்ளும் ஆர்வமோ, துடிப்போ இல்லாது, தன்னுள் சுருங்கிக் கொள்ளும் சௌபாக்கிய மன நிலையை வரமாகப் பெற்றவர்கள்.
இந்த அன்னிய மண்ணின் மக்களின் வாழ்க்கை என்ன, அவர்கள் கொண்டுள்ள மதிப்புகள் என்ன என்பதை அறிந்து கொள்ளும் அறிவுத் தாகம் வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடையே கிடையாது. அவர்களது மனமும் ஈடுபாடும் தமிழ் நாட்டின் எல்லையோடேயே சுருங்கி வேலிகட்டி முடக்கப்பட்டவை.
அன்னிய நாட்டில் சூழலில் வாழும் நிர்ப்பந்தங்கள் கூட அவர்கள் மனவெளியை பாதிப்பதில்லை விரிவு படுத்துவதில்லை. ஏனெனில், அவர்கள் நினைப்பில், தமிழ் நாடு, இலக்கியம்,, கலாச்சாரம், கலைகள், அறிவு விகாசம், என்று எதைத் தொட்டாலும் அதில் தமிழன் லிப்னிட்ஸின் அனைத்து சாத்தியமான-சிறந்த (Best of all possible)-ஐச் சாதித்துவிட்டவன்.அனைத்து சாத்தியமான-சிறந்த (Best of all possible) – உலகில் வாழ்பவன்.
அதாவது தமிழன். தமிழ் நாட்டில் பிறந்தவனாயிற்றே அவன். அப்படியிருக்க இந்த அன்னிய நாட்டில் அன்னிய மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள, அவர்களைப் பற்றித் தான் தெரிந்து கொள்ள என்ன இருக்க சாத்தியம்?
அவர்களும் இவன் சாதனையை மீறி எதுவும் செய்திருக்கப் போவதில்லை. செய்துவிடப்போவதில்லை. உலகத்தில் தலைசிறந்தநாகரீகம், பண்பாடு, கலாச்சாரம்கொண்டவர்கள் தான் தமிழர்கள். தமிழர்கள்என்பதில் பெருமை கொள்வோம். தமிழின்பெருமையை பறைசாற்றுவோம்.
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள்.