Friday 18 May 2012

ஐநா தூதுவராக எரிக்சொல்கைம்..............!


நோர்வே நாட்டிற்கான ஐநா தூதுவராக எரிக்சொல்கைம் நியமிக்கப்பட இருப்பதாக நோர்வே அரச வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.

சிறீலங்காவிற்கு எதிரான ஆப்புக்கள் கண்ணுக்கு தெரியாமல் ஆங்காங்கே வைக்கப்படுகின்றன.

01. பிராந்திய பூகோள நலன்கள் என்பதும் சர்வதேச உறவுகள் என்ற இராஜதந்திர உறவும் அரசுகளால் இராஜதந்திரிகளால் கையாளப்பட்டாலும் வேறு சில புறக்காரணிகளால் உருமாறும் வாய்ப்பு கொண்டவை. அதாவது "எங்கோ தேள் கொட்ட வேறு எங்கோ நெறி கட்டியதாம்"; என்ற பதத்திற்கு ஒப்பானது. எரிக்சொல்கைம் எமக்கு ஆதாரவான ஒருவர் அல்ல. ஒரு வகையில் பார்த்தால் எமது அழிவிற்கு காரணமான மேற்கின் தூதுவர் என்று கூட வர்ணிக்கலாம்.

ஆனால் மே 18 இற்கு பிறகு அவர் நடந்து முடிந்த போரின் ஒரு சாட்சியாக சிங்களத்திற்கு தலையிடியான ஒருவராக இருக்கிறார். அவர் அண்மையில் பதவி இழந்தது சிங்களத்திற்கு மகிழ்வை கொடுக்க அது ஐநா துதூவர் என்ற வேறு ஒரு விபரீத வடிவமாக மாறியிருக்கிறது. அவர் விரும்பியோ விரும்பாமலோ சிறீலங்கா தொடர்பான ஐநா விசாரணைகளில் முன்பைவிட கூடுதலாக பங்கெடுக்க வாய்ப்பிருக்கிறது.

02. சர்வதேச உறவுகளில் நிபுணத்துவம் உள்ள ஒரு பேராசிரியர் என்னிடம் பேசும்போது ஒரு விடயத்தை குறிப்பிட்டார். அமெரிக்கா சொல்கைமிற்கு உள்ளுரில் கட்சி மட்டத்தில் உள்ள கருத்து வேறு பாடுகளை கணக்கில் கொண்டும், நோர்வே தூதுவர் பதவிக் காலம் முடிவதை கணக்கில் கொண்டும், தாம் தொடர இருக்கும் சிறீலங்கா விவகாரத்தை தொடர்ந்து கையாள பொருத்தமான நபர் வேண்டுமென்ற கணக்கிலும் சில காய்களை நகர்த்தி சொல்கைமை இந்த பதவிக்கு கொண்டுவர முற்படுவதாக குறிப்பிட்டார். பாருங்கள் இராஜதந்திர பகடையாட்டத்தை..

03. புலிகள் அழிக்கப்பட்டது கூட இலங்கை, இந்திய, மேற்கு நாடுகளின் இந்தவகையான கூட்டு பகடையாட்டங்களின் விளைவாகத்தான். ஆனால் தற்போது அது சிங்களத்தை நோக்கி திரும்பியிருக்கிறது. எப்படி காய் நகர்த்தியும் சிங்களத்தால் அதிலிருந்து வெளியேற முடியவில்லை. மாறாக இன்னும் மேலதிக சிக்கல்களை பின்னியபடியே இருக்கிறது.

04. எதிர்பாரத சிறிய நிகழ்வுகள் பெரிய விளைவை தரும் என்பது சர்வதேச உறவுகள் சொல்லும் பால பாடம். எரிக்சொல்கைமின் ஐநா பதவி அப்படியான ஒன்று..

உதாரணத்திற்கு இன்னும் சில,

சிறீலங்காவிற்கு எதிரான ஐநா தீர்மானம், அதற்கு விரும்பியோ விரும்பாமலோ இந்தியா ஆதரவளித்தமை, வெள்ளைவான் கடத்தல்களில் அரசுதான் ஈடுபடுகின்றது என்பதை குமார் குணரட்ணம் கடத்தலூடாக அம்பலமாகியமை, இந்துக்கோயில்களை இடித்த அரசு நேற்று பள்ளிவாசல்களையும் இடிப்பதாக ஐநா வரை செய்தி வந்துள்ளமை, மகிந்தர் ஈரானிய அணுஆய்வுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்தமை, தமிழக ஆளும்கட்சியான அதிமுக இலங்கை விஜயத்தை புறக்கணிப்பதும் அது மட்டுமல்ல "இந்தியா எதிரி நாடு எம்மை ஒன்றும் புடுங்க முடியாது" என்று சொல்லும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, "ஊடகவியலாளர்களின் அடித்து நொருக்குவே"ன் என்று சொல்லும் அமைச்சர் மேர்வின் சில்வா, தனது சுயநல நோக்கில் தமிழின அழிப்புக்கு துணைநின்ற கருணாநிதி இன்று" தமிழீழம்தான் தீர்"வு என்று அறிக்கை போர் நடத்துவது கூட இந்த பகடையாட்டத்தின் ஒரு தொடர் வலைப்பின்னலே..

இது என்ன சொல்கிறது என்றால், அதாவது சில ஆப்புக்களை சிங்களமே தனக்கு எதிராக தயார் செய்கிறது. சில ஆப்புக்களின் மேல் தேடிப்போய் தானே உட்காருகிறது. எரிக் சொல்கைம் ஆப்பு பழசு என்றாலும் வடிவம் புதுசு. போதாததற்கு மேற்சொன்ன ஆப்புக்ளின் மேல் நம்பிக்கையில்லாமல் பிரபாகரனின் "பிள்ளைகள்" வேறு சில ஆப்புக்களை தயார் செய்து கொண்டிருக்கிறம். அது சிங்களத்திற்கு இறுதி ஆப்பு.

பிற்குறிப்பு; எரிக்சொல்கைம் யாரிற்கு ஆப்பு அடிக்க இறக்கிறார் என்பது காலத்தின் பதிலேயாகும்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல..