Saturday 19 May 2012

வரலாறு மீட்டெடுப்பு நடக்கா.........!























(எல்லாளனின் சமாதி) 

எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன்.

இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது.

இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சம் குறிப்பிடுகின்றது.

மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ நாட்டைச் சேர்ந்த ஒருவன் ஆவான்.

தமிழனின் வரலாறு மாற்றப்பட்டால் கூட பரவாயில்லை. தமிழனுக்கு வரலாறே இல்லை என்று மக்களிடம் பரப்புகிறார்கள் தோழர்களே.

இனியும் வரலாறு மீட்டெடுப்பு நடக்காவிட்டால் நம் பாரம்பரியமிக்க எல்லாம் அழிந்துபோய்,... தமிழன் வரலாறு இல்லாதவனாக மாறிவிடுவான்.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல..