சிங்களவன் யார் - என்பதை விளக்குகிறார் நடராசன் ஆவேசமாக ! தமிழர்கள்தான் அங்கு பூர்வீகக் குடி மக்கள் !!
யார் அந்த சிங்கள அயோக்கியர்கள் ??
இன்றைய நம் தமிழகத்தில் ..ஈழத்திற்கு குரல் கொடுப்போர் பட்டியலில் " திரு வைகோ வில் தொடங்கி , நெடுமாறன் , சீமான் "அவர்ளின் வரிசையில் அரசியில் நிழல் மனிதர் என்று கூறப்படும் நடராசன் ஓர் முக்கியமானவர் என்று கூறினால் அது தவறல்ல
அரசியல் வட்டாரத்தில் `நிழல் மனிதர்' என அறியப்படும் எம்.நடராசன், உண்மையிலேயே அ.தி.மு.க.வுடன் உறவில் இருக்கிறாரா? அல்லது உரசலில் இருக்கிறாரா? என்பது அ.தி.மு.க வின். மூத்தவர்கள் பலருக்கே புரியாத புதிர்.
எனினும், எப்போதும் அ.தி.மு.க.வுக்கு நோகாமல் கருத்துக்களைச் சொல்வதுதான் நடராசனின் கொள்கை. ஆனால் ஈழப்பிரச்னையில் மட்டும் ஏனோ அ.தி.மு.க.வுக்கு முற்றிலும் எதிரான நிலையெடுத்து நம்மிடம் பொங்கித் தீர்த்துவிட்டார் மனிதர்.
கன்னியாகுமரி அருகே சாமிதோப்பில் நடந்த தனது நண்பர் பாலபிரசாபதி அடிகளாரின் மகள் திருமண விழாவுக்கு வந்திருந்த அவரை, நாம் தனியே சந்தித்துப் பேசியபோதுதான் அவர் நம்மிடம் இப்படி கொட்டித் தீர்த்தார்...
"ஈழப் பிரச்னைக்குள் போகும் முன்பு, முதலில் ஒரு வரலாற்று உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இலங்கை என்பது லெமூரியா கண்டமாக தமிழகத்துடன் இணைந்திருந்த பகுதிதான். கடல்கோள் காரணமாகவே அது பிரிந்து, இடையில் நீர்ப்பரப்பு உருவாகி விட்டது. தமிழர்கள்தான் அங்கு பூர்வீகக் குடி.
அப்படியானால், சிங்களர்கள் யார் என்று கேட்கிறீர்களா? 7_ம் நூற்றாண்டில் ஒரிசா பகுதியிலிருந்து கிளம்பிய `களப்பிரர்கள்' என்று சொல்லப்படும் கடற்கொள்ளையர்கள்தான் அவர்கள்.
இன்றளவும் அவர்கள் மொழியில் சமசுக்கிருதம் கலந்திருப்பதை நீங்கள் காணலாம். நாளடைவில் அவர்கள் அங்கு பெருமளவில் குடியேறி, பூர்வீகக் குடியான தமிழ் மக்களை இரண்டாம் தர, மூன்றாம் தர குடிமக்களாக்கி விட்டனர்.
அமெரிக்காவுக்கு அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட கருப்பு இனத்தினர், இன்று அங்கு ஆட்சி பீடத்தையே பிடித்து விட்டனர். ஆனால் இலங்கையில், ஆண்ட தமிழினம், வீழ்ச்சியடைந்து கிடக்கிறது.
இதில் பெரிய சோகம், உரிமைக்காக அவர்கள் போராடுவதை இங்குள்ள சிலரே, `தீவிரவாதம்' என முத்திரை குத்துவதுதான்.
ஒரு இனவெறித் தாக்குதலில் இருந்து அப்பாவி மக்களைப் பாதுகாக்க தங்களை முன் நிறுத்துபவர்களை எப்படி தீவிரவாதிகளாகச் சொல்ல முடியும்?. அவர்கள் போராளிகள் அல்லவா?
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கறுப்பர் இனத்தவருக்குள்ளேயே இரு உட்பிரிவுகளுக்குள் மோதல்! அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக ஐ.நா. தனது படையைக் கொண்டுபோய் நிறுத்துகிறது.
ஏன் இலங்கையில் அதைச் செய்ய மறுக்கிறார்கள்?. காரணம், இந்தியா! இவர்கள் இன்னொரு நாட்டுப் பிரச்னையில் தலையிட மாட்டார்களாம்.
இலங்கை தமிழர்களின் நாடு ...அதன் மூத்த குடி மக்கள் தமிழர்களே என்ற உண்மையை இங்கு உள்ள ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டும் .
அந்த எழுச்சி ஒன்று மட்டும் இங்கு உள்ள அணைத்து தமிழர்களின் மனதில் இருந்தால் தமிழ் ஈழம் மிக எளிதாக பெற்றுவிடலாம் என்கிறார் திரு நடராசன்.
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல..