Thursday 17 May 2012

யார் யாரிற்குத் தண்டனை...............!


அகிம்சாவாதிகளும், ஆயுத உற்பத்தியாளர்களும், ஆதிக்க வேறியர்களும், சமாதான விரும்பிகளும், சமாதானத்திற்காக நோபல் பரிசு கொடுத்தோரும், உலகின் நலன்களிற்கு முன்னோடிகளும், தமக்ககுள் பிராந்திய போட்டியில் ஈடுபட்டோரும்,

ஆயுதக் கிளர்ச்சியினால் தங்கள் இன, நாட்டின் விடிவைக் கண்டவர்களும், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் பல அடைமொழிகளைத் தமது நாட்டின் பெயரிற்கு முன் வைத்திருந்த அனைத்து உலகமுமே!!!

நன்கு திட்டமிட்டு, காலக்கெடு கொடுத்து அரங்கேற்றியதே தமிழ் ஈழத்தாயகத்தின் அழிப்பும், தமிழ் இன ஒழிப்புமாகும்.

இவற்றை விமர்சிக்க வார்த்தைகளே இல்லையெனலாம், யார் யாரிற்கு விடிவைத்தேடித் தருவது அனைத்துமே கண் துடைப்பெயன்றி வேறோன்றுமில்லை.


யார் யாரிற்குத் தண்டனை கொடுப்பது, அப்படி தண்டனை கொடுப்பது "தற்கொலைக்கு" ஒப்பானதே! உலகில் சிதைக்க்க்கப்பட்ட இனத்திற்கு உதாரணம் "தமிழ் ஈழத்தாயகத் தமிழர்கள்"!. தமிழ் ஈழத்தாயகத்தில் சிதைக்கப்பட்ட பெண்களிற்கான வரலாற்றிற்கு உதாரணம் "இசைப்பிரியா".



தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல..