தொலைக்காட்சிகளிலும்,வானொலி போன்ற அனைத்து ஊடகங்களிலும் வயிற்றுப் பிழைப்பிற்காக தன்இனத்தினுடைய தேசியம், சுதந்திரம், சுயநிர்ணயம் என்பவற்றை விற்று ஈனவாழ்வு வாழும் ஈனப்பிறவிகளே!
விடுதலைப் போராட்டத்தின் கொள்கை, பறுறுதி, அர்ப்பணிப்பு, தியாகங்களை மேற்கொள்ளாதவர்கள்.
முன்பு நான் மேற்குறிப்பிட்ட விடயங்களில் தவறிழைத்து போராட்டக் களத்திலிருந்தும், போராட்டக்காலத்திலும் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை எல்லாம் எங்கே தேடிப்பிடித்து,
அவர்களிற்கு புதிய முகவரிகளைக் கொடுத்து களமிறக்கி உங்களுடைய ஊதுகுலல்களிற்கும் வலுச்செர்ப்பதையும், கொச்சைப்படுத்துவதையும் புலம்பெயர் தமிழர்களது ஒற்றுமை, தாயகவிடுதளைக்கான உறுதிப்பாட்டைக் குலைக்கும் செயற்பாட்டை நிறுத்துங்கள்
தாயகத்தில்தான் அரச கட்டுப்பாட்டிற்குள் சிக்குண்ட மக்கள் அவர்கள் வாழும் சூழலில் அங்கு நடைபெறும் கொடுங்கோல் ஆட்சியில்,ஆட்சியாளர்களின் வற்புறுத்தலினால் ஆட்சியாளர்களின் ஊடகங்களில் என்னசொல்லச் சொல்லுகிறார்களோ அதன்படி நடக்கவேண்டியுள்ளது.
ஆனால் புலம்பெயர் வாழ்விலுள்ள உங்களிற்கு என்ன அச்சுறுத்தலினால் இப்படி இரண்டகம், பச்சைத்துரோகம், காட்டிக்கொடுப்பு எல்லாவற்றையும்விட அவதியுறும் தாயகம்க்களின் வாழ்வில், விடிவில் மண்ணைப்போட்டு வயிற்றுப் பிழைப்பினை நடதமுடிகிறது?
புலம்பெயர் தமிழ்மக்களே! உங்களிற்கு ஓர் அன்பான வேண்டுகோள்! சோரம்போன ஊடகங்களின் காட்டுதர்பாரை ஒதுக்கி தாயகமக்களின் விடிவினை வென்றெடுக்க திடசங்கற்பம் கொள்வோம்.
தன்மானமிக்க தமிழனாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல