Tuesday 20 December 2011

தாயகத்தை.....

உயிருமேலான தமிழ்ஈழதாயகத்தையே,பெற்ற அன்னையிலும் மிகச்சிறந்த உறவு என்பேன் .அப்படிப்பட்ட தமிழீழத்தாயாகத்தையும், தாயகமக்களையும் ஏன் வெறுக்கிறீர்கள்?


தாயகமோ,தாயகமகளோ செய்த தவறுதான் என்ன? நாங்கள் அங்கு,அம்மக்களிற்கு என்னசெய்கிறோம் என்பதை மிக அவதானத்துடன்,நிதானமாகச் செயற்படுகிறோமா என்றால் அதுதான் இல்லை.


எங்கு நாங்கள் சென்றாலும் தத்தமது சுயவிருப்பு,வெறுப்புக்களை தாயக மேம்பாடிற்காக உழைக்கும் இடங்களில் துற்பிரயோகம் செய்வதனூடாக அச்செயற்பாடுகளிற்கு அபகீர்த்தி ஏற்படுத்திக் கொள்வதும்.


ஏற்படக் கூடிய விளைவுகளை கருத்திற் கொள்ளாமல் தங்களது தற்பெருமை, தற்புகழ்ச்சி போன்றவற்றை எதிர்பார்த்து.

தாயகத்தின் விடிவினை மளுங்கடிக்காது தாயகத்தின் விடிவிற்காக உலகத்தமிழர்கள் அனைவரினதும் குரலாக ஒன்றிணைவோம்.


தமிழ்ஈழதாயகத்தின் விடிவிற்கான குரலிற்காக உலகத்தமிழர்களை ஒன்றினைப்பதே குறிக்கோள்.

தமிழ்ஈழ விடிவிற்காக உலகத்தமிழர்களின் ஒருமித்த குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல