தூக்கிப் போடுவதும்,
துரோகம் செய்வதும்,
ஏளனம் செய்வதும்,
ஏமாற்றி கொள்வதும்,
சாதாரணமாய் செய்யும்.
அசாதாரண பிறவிகளே...!
நரகம் கூட
நாளை இவர்களை கண்டு
கதவடைக்கலாம்!!
ஆச்சரியமில்லை...!!!
காயம்பட்ட இதயத்திற்குள்ளும்
கத்தியால்
கல்லறை நெய்கிறார்கள்..!
தமிழ்ஈழ தாயகம், தாயகமக்களின்
கண்ணீர் துளிகளை
பெருங் கடலாக்கி அதில்
மூழ்கி எழுந்து
முகம் சிரிக்கிறார்கள்..!
பொய்கள் கோர்த்த
வார்த்தையில்
சிக்கிக் கொண்டே மரணிக்கிறது ....!
மனது....
சோகங்களை சுமந்தே
சோர்ந்து போய் கிடக்கிறது...!
ஈழத்தமிழ் இனமும்,தாயகமும்...
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.