Thursday 15 December 2011

விழிப்பாக,உறுதியுடன்



ஆயுதப் போராட்டம் மெளனிக்கப் பட்டதற்கு முன்பும்,பின்பும் தாயக விடுதலைக்கான போராட்டம் சரியான வழிகாட்டலில் நேர்த்தியுடனும்,கொள்கைப் பற்றுடனும்,இதயசுத்தியுடனும் மேற்கொள்ளப்பட போது புலம்பெயர்நாடுகளில் நாங்கள்தான்தாயகப் போராட்டத்தின் புலம்பெயர் பிரதிநிதிகள் என்று தங்களிற்கு ஒரு முகவரியைப் பாவித்தவர்கள்.

இவர்கள்தான் புலம்பெயர் வாழ்விலுள்ள சமூகத்தினருக்குள் பொருளாதாரத்திலும்,புகழிலும் தம்மைத்தாமே நிலைநிறுத்திக் கொண்டவர்கள்.தற்பொழுதும் பொருளாதாரத்திலும், புகழினையும் நிலைநிறுத்துவதற்காகவே.


தாயகத் தமிழினத்தின் விடிவிற்கான எதையும் பொருட்படுத்தாது இந்த ஈனச் செயல்களை செய்பவர்கள் ஆயுதப்போராட்டம் நடைபெற்ற போதும்,ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னரும் மேற்கொண்டு வருகிரார்கள்.

அதலால் மிகமிக விழிப்பாகவும்,நிதானத்துடன் உங்களது தமிழர் தாயகத்திற்கான பணிகளை,பங்களிப்புகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நான்மேற்குறிப்பிட்ட அனைத்தும் யாரையும் விமர்சிப்பதோ அல்லது மனதில் காயமேற்படுத்துவது என்னும் நோக்கத்திற்காக இல்லை.நீங்களாகவே இனங்காணப்பட்ட வேண்டு என்பதற்காகவே.

எதற்காக தாங்கள்,தங்களிற்குள் இரண்டுபட்டு அல்லலுறும் தாயக மக்களின் விடிவிற்காக உழைக்காமல் அவர்களின் துயரத்தை,விடிவை நோக்கிப் பயணிக்காமல் தமிழ்மக்களுடைய போராட்டத்தின் போது அவகளிற்கு ஏற்பட்ட மனித அழிவு,சொத்து உடமை அழிவு, விடுதலைப்போராளிகளின் தியாகம் அனைத்தையுமே கவனத்தில் கொள்ளாமல் அவர்களது இழப்பு,தியாகம் ஆகியவற்றை விற்றுப் பிழைப்பு நடாத்துகிறார்கள்?

இவகர்கள் தங்களைத், தங்களையே விற்றுப் பிழைப்பவர்கள் எதிர்காலத்தில் ஏன்தாய்,தாரம்,உடன்பிறந்தோர்,பிள்ளைகளைக் கூடவிற்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி?

அன்பார்ந்த புலம்பெயர் தமிழ் மக்களே! உங்களது மிகவும் விழிப்பான செயற்பாட்டினை தாயகம் நோக்கி நர்த்துவோம்,

சுய இலாபங்களிற்காக தன்னையும்,தன்மானத்தையும் விற்ற, விற்றுக்கொண்டிருக்கும் ஈனர்களை புறந்தள்ளி, இனம்காண்போம்.


அவர்களின் செயற்பாடுகளிற்கு ஒத்துழைப்புக் கொடுக்காது.

தாயக விடிவிற்காக உறுதியுடன் தமிழராய் ஒன்றிணைவோம்!!!

நன்றிகள் பல.